கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் நவம்பர் 2 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் பட்டி யலின மக்கள் மீது ஊராட்சி மன்றத் தலைவர், அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை யில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து 29.10.2023 அன்று பட்டியலின மக்கள் குடியிருப்புகளில் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து வீடுகளை அடித்து உடைத்தும், தீ வைத்தும், மக்கள் மீது கற் களை வீசியும் கொடூரமாக தாக்கி யுள்ளனர். இத்தாக்குதலில் கொடுங் காயங்கள் ஏற்பட்டு பலர் மருத்து வமனையில் சிகிச்சையில் உள்ள னர். இந்த கொடூரமானத் தாக்கு தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கி/றது. காவல்துறை இந்தப் பிரச்ச னையில், இரு தரப்பிலும் கைது என்ற முறையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையும் கைது செய்திருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, சிறையில் அடைக்கப்பட்ட பட்டி யலின மக்களை உடனடியாக விடு விக்க வேண்டும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த கிராமத்தில் சுமூகமான நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை உள்ளிட்ட சாதி மேலாதிக்க கொடுமைகளில் ஈடு படுவோர் மீது உரிய குற்ற நட வடிக்கைகளை பாரபட்சமின்றி எடு த்திட வேண்டும். அனைத்துக்கட்சி - அமைப்புகள் கொண்ட குழுக்கள் அமைத்து சாதிய சக்திகளை தனி மைப்படுத்திட வேண்டும். மக்கள் மத்தியில் அறிவியல் ரீதியான முற்போக்கு கருத்தியலை வளர்த்தெடுத்திட வேண்டும்.