states

img

பொய்களின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... --- காயும் தொழிலாளர் வயிறு!

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் -  சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு

வேலைகள் – பறிப்பும் வீழ்ச்சியும்!

  •     உற்பத்தித் துறையில் கிடைக்கும் வேலைவாய்ப்பின் பங்கு, மொத்த வேலைவாய்ப்பில் 2012இல் இருந்த 12.85 சதவீதத்தில் இருந்து, 2018இல் 11.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  •     மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2013 முதல் 2022 வரை நிரந்தர வேலைவாய்ப்பு 2.7 லட்சம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் வகைப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 19 சதவீதத்திலிருந்து 42.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  •     ஐ.எல்.ஓ. தரவுகளின்படி, அரசு மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு என்பது  இந்தியாவில் 3.8 சதவீதமாக உள்ளது. இது உலகிலேயே மிகவும் குறைவானதாகும்.  அர்ஜெண்டினாவில் இது 16.9 சதவீதம்; பிரேசிலில் 12.3 சதவீதம்;  சீனாவில் 28 சதவீதம்;  அமெரிக்காவில் 13.3 சதவீதம்; இங்கிலாந்தில் 21.5 சதவீதம்; ரஷ்யாவில் 40.6 சதவீதம். கியூபாவில் இது 77 சதவீதம் ஆக உள்ளது.
  •     2014க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சம்  குறைந்துள்ளது. அதேநேரத்தில் ஊழியர்களாக அங்கீகரிக்கப்படாத வங்கி நண்பர்கள் அல்லது வணிகத்தொடர்பாளர்களின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகமாக, அதாவது நிரந்தர ஊழியர்களை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 
  •     இதே காலகட்டத்தில் தனியார் துறை வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2014இல் 3,35,615 ஆக இருந்தது 2023இல் 7,45,612 ஆக, அதாவது இரு மடங்கு அதிகரித்துள்ளது.  தனியார் துறையிலோ அல்லது ஒப்பந்த வேலைகளிலோ இட ஒதுக்கீடு பொருந்தாது என்பதும் கவனிக்கத்தக்கது.
  •     இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் 2023 அக்டோபர் மாத புள்ளி விவ ரங்கள் சிறிய கடைகளில் 1.03 கோடி தினக்கூலித் தொழிலாளர்கள் குறைந்துள்ளதாகவும், சம்ப ளத்தொழி லாளர்களின் எண்ணிக்கை 46 லட்சம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

சொன்னது

2020 செப்டம்பரில் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டபோது, அதை முன்னிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியங்களை, அதிலும் குறிப்பாக சரியான நேரத்தில், வழங்குகின்றன. அவை தொழிலாளர்களின் தொழில்ரீதியான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் மிகச்சிறந்த பணிச் சூழலுக்குப் பங்களிக்கும். இது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை மேலும் விரைவுபடுத்தும். இந்தத் தொழிலாளர் சீர்திருத்தங்கள் ‘வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை’ யும் உறுதி செய்யும்.”

உண்மை நடப்பு என்ன?

•    மோடி அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளர்களின் கடுமை யான போராட்டங்களின் மூலம் பெற்ற அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘வர்த்தகம் செய்வதை  எளிதாக்குவதை’ உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டவையாகும்.

• குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல், போனஸ் கணக்கீடு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், ஊதியத்துடன் தொடர்புடைய இன்னபிற படிகள் போன்றவற்றை உறுதி செய்த குறைந்த பட்ச ஊதியச் சட்டம், ஊதியம் வழங்கல் சட்டம்,  போனஸ் சட்டம் மற்றும் சம ஊதியச் சட்டம் ஆகிய வற்றுக்குப் பதிலாக இந்த ஊதிய தொகுப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 •    இந்தியத் தொழிலாளர் மாநாடு மற்றும் உச்சநீதி மன்றத்தால் ஏற்கப்பட்ட, ஒப்புதல் அளிக்கப்பட்ட அளவிற்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கக்கூட மோடி அரசு மறுத்துவிட்டது.  •தொழிற்சங்கங்களும், தனித்திறன் பெறாத தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.26,000/- குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்று கோரி போராடி வருகின்றன.

ஆனால், தொகுப்புச் சட்டங்கள், அமைப்புசாரா தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தவில்லை. மோடி அரசு 2017இல் அடிமட்ட ஊதியத்தை ரூ.176/- ஆகவும் 2023இல் ரூ. 178/- ஆகவும் நிர்ணயித்தது. அதா வது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் ரூ. 2 மட்டுமே உயர்வு. 

தொழிலாளர் நலன் - கேள்விக்குறி

‘மோடி அரசின் தொகுப்புச் சட்டங்கள்’ தொழிலாளர் களின் சட்டப்பூர்வமான பணியிட உரிமைகளை அப்பட்டமாக மீறுவதை சட்டப்பூர்வமாக்குகின்றன.  

•‘தொழிலாளர்களின் சங்கம் அமைப்பதற்கான, கூட்டு நடவடிக்கைக்கான அடிப்படை உரிமை களைப் பறிக்கிறது.  

•    குறிப்பிட்ட கால அளவிலான வேலைவாய்ப்பு, ஒப்பந்த வேலை போன்ற பலவீனமான வேலை முறைகள் ஊக்குவிக்கப் படுவதோடு, வேலை உறவுகளின் தன்மையிலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

•    தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எந்த வொரு குறிப்பிட்ட சலுகைகளையும் முன்மொழிய வில்லை. எந்தவொரு சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கும் தேவையான ஆதார வளங்களையும் வழங்கவில்லை. இ.பி.எஃப்., இ.எஸ்.ஐ. போன்ற  நலத்திட்டங்களை அகற்றுவதற்கான வாய்ப்பை, இத்தொகுப்புச் சட்டங்கள் அரசுக்கு அளிக்கின்றன.

•அரசால் மேற்கொள்ளப்பட்ட 2022-23இன் கால முறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, ஒரு  சாதாரண தொழிலாளியின் சராசரி தின ஊதியம் வெறும் ரூ. 403 ஆகும். மாதத்தின் 30 நாட்களும் வேலை கிடைத்தால் இது மாதத்திற்கு ரூ. 12,075/- ஆக இருக்கும்.

 •    ஆண் தற்காலிக தொழிலாளர்கள் மாதம் ரூ.12,990/- சம்பாதிக்கின்றனர். அதேநேரத்தில் பெண் தொழிலாளர்கள் ரூ.8,385/- மட்டுமே பெறு கின்றனர். சுயதொழில் பிரிவில், சராசரி வருமானம் மாதத்திற்கு ரூ.13,131/- ஆகும். ஆண்கள் சரா சரியாக ரூ.15,197/- பெறுகின்றனர். சுயதொழில் செய்யும் பெண்கள் வெறும் ரூ.5,516/- மட்டுமே ஈட்டுகின்றனர்.

 •    வழக்கமான ஊதியம் அல்லது மாத ஊதியம் பெறு வோர் சராசரியாக மாதத்திற்கு ரூ.19,492 பெறுகின்ற னர். ஆண்கள் ரூ.20,666/- மற்றும் பெண்கள் ரூ.15,722/- ஈட்டுகின்றனர்.  

•    இவை இந்தியத் தொழிலாளர்களின் மிக மோசமான வருமான நிலைகள் ஆகும். தொழிலாளர்களில் 21 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர அல்லது மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் என்பதை நாம்  கவனத்தில் கொள்ள வேண்டும். மீதம் உள்ளவர் களில் பெரும்பான்மையோர் (57 சதவீதம் பேர்) சுய தொழில் செய்வோர் ஆவர். 22 சதவீதம் பேர் தற்கா லிக தொழிலாளர்கள். இந்தத் தரவு ஆண்கள் மற்றும் பெண்களின் ஊதியத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வேறுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறது. 

முறைசாரா தொழிலாளர்கள்

•    எண்ணற்ற முறைசாரா தொழிலாளர்களுக்கு நிவா ரணம் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  2021-22 பொருளாதார கணக்கெடுப்பின் படி, 2019-20ஆம் ஆண்டில் முறைசாரா துறையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 43.99 கோடியாக இருந்தது. அவர்களைப் பாது காக்க எந்தவித சட்டரீதியான கட்டமைப்பும் இல்லா மல் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு, ஆபத்தான வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர்.  

•    மோடி சகாப்தம் முழுவதிலுமே குறைந்தபட்ச ஊதி யத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக தொழிலாளர்கள் போராடி வந்துள்ளனர். எனினும் அரசு மிகவும் இரக்கமற்ற, அலட்சியமான அணுகு முறையையே கடைப்பிடித்து வந்துள்ளது. 

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைப் பறித்த பாஜகவைத் தோற்கடிப்போம்!!