மும்பை மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு முக்கியத் தலைவர்கள் விலகி இருப்பது பாஜக - அஜித்பவார் கூட்டணி க்கு மேலும் பலவீனத்தை உருவாக்கி யுள்ளது. பிம்ப்ரி சின்ச்வாட்பகுதியின் தலை வரான அஜித் கவாஹனே, மாணவர் அமைப்பு தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலே கர் ஆகிய நால்வரும் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் நால்வரும் மூத்த தலைவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அணியில் சேர உள்ளனர். இது குறித்து அஜித் கவாஹனே பேசிய போது “நாங்கள் சட்டப்பேர வை முன்னாள் உறுப்பினர்கள் அனை வரையும் சந்திக்க இருக்கிறோம். அங்கு எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம். நாங்கள் பவார் சாஹேப்பின் (சரத் பவார்) ஆசிர்வாதத்தை பெறப்போகிறோம்.இனிமேல் நாங்கள் இணைந்து முடி வெடுப்போம்.” என தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பெற்ற தோல்வியை தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அஜித் பவாரின் அணியில் இருந்து சிலர் மீண்டும் சரத் பவாரின் அணிக்குத் திரும்பலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அணிமாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, ஜுன் மாதம் பேசிய சரத் பவார், கட்சியினை பலவீனப் படுத்த முயற்சித்தவர்களுக்கு கதவு கள் மூடப்பட்டுவிட்டது, என்றாலும் கட்சியின் பெயரினை களங்கப்படுத்தா மல் அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.