states

img

முதலிடத்தில் கேரளம்

அற்றிங்கல் மக்களவைத் தொகுதி யில் எல்.டி.எப். வேட்பாளர் வி. ஜாய்-க்கு ஆதரவாக ஏப்ரல் 11  வியாழனன்று தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் பினராயி விஜயன் கூறி னார், ‘கேரளம் இப்போது பல விசயங்க ளில் நம்பர் ஒன்’ என்று. இதை மேலும்  முன்னெடுத்துச் செல்லும் சமரசமற்ற போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். கூட்டம் நடைபெற்ற பாலச்சிறை யிலிருந்து சிவகிரி வெகு தொலைவில் இல்லை. நாராயண குரு கூறிய, ‘சாதி,  மதம், வேறுபாடின்றி பகையின்றி அனை வரும் சகோதரத்துவத்துடன் ஆட்சி செய்யும் முன்னுதாரணமான கேரளத் தின் முன்மாதிரியான ஜனநாயகம், நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் ஆற்றலைத் தரும்.’ என  நினைவு கூர்ந்தார் முதல்வர். புதிய கேரளம் அரங்கிலும், குடியு ரிமைச் சட்டத்துக்கு எதிரான கண்டனக்  கூட்டங்களிலும் மக்களுடன் உரை யாடிய பிறகு தேர்தல் கூட்டங்களில்  நுழைந்தார் பினராயி. இந்த விவாதங் கள் மூலம் கேரளத்துக்கு எதிரான ஒன்  றிய அரசின் கொள்கைகளை நியாயப்  படுத்தும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு களையும் அம்பலப்படுத்த முடிந்தது. முதல்வரின் தேர்தல் பிரச்சாரக் கூட் டங்கள் கடந்த மார்ச் 30ஆம் தேதி நெய்  யாற்றின்கரையில் துவங்கியது. ஏப்ரல்  22ஆம் தேதி கண்ணூரில் நிறைவடை கிறது.