states

img

ஒடுக்கப்பட்டோரை பாதுகாக்க உறுதி பூண்ட கேரளம்: முதல்வர்

திருவனந்தபுரம், மார்ச் 18- சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக கேரளா நிற்கிறது. அவர்களுக்காக நிலச் சீர்திருத்தம் முதல் நல ஓய்வூதியம் வரை  அனைத்தும் செயல்படுத்தப்பட்டது என்று  முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் குடியரசுத் தலை வர் திரௌபதி முர்முவுக்கு மாநில அரசு  அளித்த குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில்  முதல்வர் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: பட்டியல் பழங்குடியினருக்கு, அவர்  களின் மக்கள்தொகைக்கு அதிகமான பட்  ஜெட் ஒதுக்கீட்டை உறுதி செய்தல். தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும், உல கத்தரம் வாய்ந்த வளர்ச்சித் திட்டங்களை  கேரளா மேற்கொண்டு வருகிறது. இதன்  மூலம் எந்தவொரு குடிமகனும் சுயமரி யாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்  வதற்கான சூழல் உலகில் வேறு எங்கும்  காண முடியாத வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. முழு சமூகத்திற்கும் சமத்து வத்தை உறுதிப்படுத்தும் வகையில் விரி வான வளர்ச்சி நடவடிக்கைகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையை அரசு உறுதி செய்துள்ளது. 1998 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு  மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் உருவான குடும்பஸ்ரீ இன்று மிகவும் முன்னேறியுள்ளது. சிறந்த சேவை வழங்குநராக குடும்பஸ்ரீ மாறியது. சமூ கத்தின் அடிமட்டத்தில் உள்ள உள்ளூர் சுய- அரசு (உள்ளாட்சி) அமைப்புகளுடன் தீவி ரமாக பணியாற்றுகிறது. லட்சக்கணக் கான உறுப்பினர்களின் வாழ்வுடன், செயற் பாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை குடும்பஸ்ரீ வழங்குகிறது என முதல்வர் தெரிவித்தார்.