புதுதில்லி, மார்ச் 19- இரண்டு நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மார்ச் 19 அன்று இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் இந்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வந்தார் .தில்லி வந்த கிஷிடோவை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர் ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி -ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தில்லியில் சந்தித்தனர். இன்று இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.