புதிய செயலாளராக ஜனேஷ் தேர்வு
லண்டனில் இந்திய கம்யூனிஸ்டுகள் சங்கத்தின் 20ஆவது மாநாடு
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த அமைப்பான இந்திய கம்யூனிஸ்டு களின் சங்கத்தின் (AIC) 20ஆவது மாநாடு, மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் இங்கிலாந்து தலை நகர் லண்டனின் சீத்தாராம் யெச்சூரி (சவுத்தல் சிட்டி) நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட் லாந்து மற்றும் அயர்லாந்தி லிருந்து 110 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களில் 15 பேர் பெண்கள் மற்றும் 67% பிரதிநிதிகள் 50 வய துக்கு குறைவானவர்கள் ஆவர். 93 வயது மூத்த தலைவர் அஜித் சிங் தோசாஞ்ச் செங்கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டு, தியாகி களுக்கு மலரஞ்சலி செலுத்தப் பட்டது.
அசோக் தாவ்லே “
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து உலகம், இந்தியா மற்றும் பிரிட்டனில் உள்ள அர சியல் சவால்களைப் பற்றி உரை யாற்றினார். பன்னாட்டு அள வில் ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசம் ஆகியவற்றின் ஆபத்துகளை பற்றியும், இந்தியா மற்றும் பிரிட்டனில் ஆர்எஸ்எஸ் - பாஜகவால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் கார்ப்பரேட் - இந்துத் துவத்தின் ஆபத்துகளையும் தெளி வாகச் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மதச்சார்பற்ற சக்தி களின் ஒற்றுமையை மீண்டும் உரு வாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அசோக் தாவ்லே, சிபிஎம் மற்றும் இடதுசாரி சக்திகளின் சொந்த வலிமையை பெரிதும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறினார். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டுகளின் சங்கத்தின் (ஏஐசி) செயலாளர் ஹர்சேவ் பெயின்ஸ் அறிக்கையை முன் வைத்தார். ஒவ்வொரு கிளையி லிருந்தும் 20 பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்கள், விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகளுடன் அறிக்கையை வளப்படுத்தினர். அறிக்கை ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
தொழி லாளர்களின் உரிமைகள், கியூபா மற்றும் பாலஸ்தீனம் குறித்து மூன்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இறுதியாக மாநாடு ஒருமன தாக 19 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவை (EC) தேர்ந்தெடுத்தது. இதில் இரண்டு பேர் பெண்கள். இளைஞர்கள், குறிப் பாக இளம் பெண்களை இணைப்ப தற்காக மேலும் 4 இடங்கள் காலி யாக விடப்பட்டுள்ளன.
மூன்று முறை செயலாளராக பணி யாற்றிய ஹர்சேவ் பெயின்ஸுக்கு பதிலாக ஜனேஷ் நாயர் புதிய ஏஐசி-யின் செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் நடைபெறும் 24 ஆவது கட்சி மாநாட்டிற்கு 2 பிரதி நிதிகள் (ஹர்சேவ் பெய்ன்ஸ், ராஜேஷ் கிருஷ்ணா) தேர்ந் தெடுக்கப்பட்டனர். மாநாட்டின் முடிவுரையில் அசோக் தாவ்லே அனைத்து பிரதிநிதிகளையும் ஒற்றுமையாக மற்றும் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியதற்காக வாழ்த்தி, உடனடி அமைப்பு பணிகளை மேற் கொள்ள வேண்டுகோள் விடுத் தார். மாநாடு உற்சாகத்துடன் முடிவடைந்தது.
முதல் முறையாக...
1938ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய தொழிலாளர் சங்கத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1967 ஆம் ஆண்டு சிபிஎம்-இன் அமைப்புவிதி மற்றும் திட்டத்தைப் பின்பற்றி, இந்திய கம்யூனிஸ்டுகள் சங்கம் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த மாநாடு வரை, அதன் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பஞ்சாபிலிருந்து குடியேறியவர்கள். எனவே செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய சூழலில் 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஏஐசி செயலாளர் பதவிக்கு (ஜனேஷ்) தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஜனேஷ் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிடாங்கூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியர் மனு கள்ளிக்காட்டுக்கு லண்டனில் வரவேற்பு
சிபிஎம் அகில இந்திய மாநாட்டுக்கு முன்னோடியாக லண்டனில் நடைபெற்ற அஸோஸியேஷன் ஆப் இந்தியன் கம்யூனிஸ்ட் (ஏஐசி) தேசிய மாநாட்டில் ஓவியர் மனு கள்ளிக்காட்டுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. 24ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான சின்னம் வடிவமைத்தவர் கேரளா வண்டூரைச் சார்ந்த மனு ஆவார். மனு கள்ளிக்காட்டுக்கு ஏஐசி தேசிய மாநாட்டில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே நினைவுப் பரிசு வழங்கினார்.