வேலூர், ஜூலை 15- தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் 11 ஆவது மாநில மாநாடு வருகிறஆகஸ்ட் 27,28 ஆகிய தேதிகளில் தென்காசியில் நடை பெறுகிறது. தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் எஸ்.பாப்பனு, துணைப் பொதுச் செயலாளர் வி. நாகேந்திரன் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூலி உயர்வு ஆணை...
பீடித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 10.5.2022 ஆம் ஆண்டு தொழிலாளர் தனித் துணை ஆணையர் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஊதிய உயர்வு அடிப்படையில்ஆயிரம் பீடிக்கு ரூ. 13 உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டு அமலாக்கி இருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை அர சாணை வெளியிடாததால் லட்சக் ்கணக்கான பீடித் தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காத நிலை உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அர சாணை வெளியிட வேண்டும்.
பஞ்சப்படி மறுப்பு...
விலைவாசி அடிப்படையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி பஞ்சப்படி உயர்வு தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது. அதன்படி டிரேட் மார்க் பீடி கம்பெனிகள் பஞ்சப் படி உயர்வு தொகை தொழிலாளி களுக்கும் வழங்க வேண்டும். பெரும்பாலான பீடி கம்பெனிகள் பஞ்சப்படி உயர்வு வழங்காமல் தொழி லாளர்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசு பஞ்சப்படி உயர்வு வழங்க மறுக்கும் பீடி கம்பெனிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிக்கொடை சட்டம்
பீடித் தொழிலாளர்கள் ஓய்வு, மரணம்,ராஜினாமா செய்யும் போது அவர்கள் பணிபுரிந்த காலத்தை கணக்கிட்டு சட்டப்படியான பணிக்கொடை வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கம்பெனி கள் பணிக்கொடை தொகையை குறைத்து வழங்கி வருகின்றன. ஆனால் தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது தமிழ்நாடு அரசு பணிக்கொடை சட்டத்தை ஏமாற்றும் பீடி கம்பெனி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
சேம நல திட்டம்
பீடித்தொழிலாளர்களின் சேம நல திட்டங்களான வீடு கட்டும் திட்டம், மருத்துவ சிகிச்சை, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கு செஸ் வரி மூலம் நிதி திரட்டப்படு கிறது. ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் பீடிக்கு 28 விழுக்காடு வசூலிப்பதால் சேமநல திட்டங்க ளுக்கான நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி நிதியிலிருந்து சேம நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
வீடு கட்டும் திட்டம்...
வீடற்ற பீடி தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட் டத்தில் பீடித் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடத்திற்கு காலதாம தமின்றி பட்டா வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் சுருட்டு தொழி லாளிக்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கியும்,உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர் தலையீட்டால் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இப் பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.
மாநாடு - ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன 11ஆவது மாநாட்டை தென்காசியில் ஆகஸ்ட் 27,28 தேதிகளில் நடத்துவது என்றும், பீடித் தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், செப்டம்பர் மாதத்தில் தலைநகர் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.