வடக்கு காசா ஜபாலியா முகாம் பகுதியில் உள்ள அபு ஹுசைன் பள்ளிக்கூடம் மீது குண்டு வீசி 20 க்கும் அதிகமான குழந் தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது.மேலும் 1000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அடைக் கலம் புகுந்துள்ள ஜபா லியா முகாமில் உள்ள கூடாரங்களின் மீதும் குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலால் பல தற்காலிக கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 50 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.