states

img

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அஜித் பவார் - பாஜக இடையே தீவிரமடையும் மோதல்

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க் கிழமை நிறைவு பெற்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையி லான மகாயுதி கூட்டணியில் அடிதடி தீவி ரமடைந்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக - சிவசேனா (ஷிண்டே) இடையே கடந்த வாரம் மோதல் ஏற் பட்டது. இந்த மோதலால் கல்யாண் கிழக்கு, தானே, நவி மும்பை மற்றும் முர்பாத் உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு  பிரச்சாரம் செய்ய மாட்டோம் என சிவசேனா (ஷிண்டே) அறிவித்தது. தற்போது தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு பிரச்சாரம் செய்ய மட்டோம் என பாஜக  அறிவித்துள்ளது. “நவாப் மாலிக் தாவூத் இப்ராகிமு டன் தொடர்பில் இருப்பதாக குற்றச் சாட்டு இருப்பதால், அவர் போட்டியிடும் சிவாஜி நகர் தொகுதியில் நாங்கள் பிரச்சாரம் செய்ய மட்டோம்” என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பிற்கு தேசிய வாத காங்கிரஸ் (அஜித்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.