states

img

இந்திய தலைவர்கள் தலையிட வேண்டும்... ஹிஜாப் அணியும் மாணவியரின் கல்வியை தடுப்பது ஆபத்தானது!

இந்தியாவில் ஹிஜாப் அணிவ தற்குத் தடை என்ற பெயரில், இஸ்லாமிய மாணவியரின் கல்வி  உரிமையைப் பறிக்கும் சூழ்ச்சிக்கு மலாலா கண்டனம் தெரிவித்துள் ளார்.  குழந்தைகள் மற்றும் பெண் களுக்கான கல்வி, உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர் மலாலா யூசப் சாய். பாகிஸ்தானில் பிறந்த இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு  தனது 11 வயதில் தலிபான் பயங் கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார். இவ ருக்கு 2014-ம் ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கப்பட் டது. இளம் வயதில் அமைதிக் கான நோபல் பரிசு பெற்றவர் இவர். இந்நிலையில், ஹிஜாப் விவ காரம் குறித்து, டுவிட்டரில் பதி         விட்டிருக்கும் அவர், “கல்லூரி கள் எங்களை கல்வியா? ஹிஜாப்பா? என்று தேர்வு செய்யும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயலாக உள்ளது. குறைந்த ஆடை, அதிகமான  ஆடை என ஆடையின் அடிப்ப டையில் பெண்களை ஏதேனும்  வரம்புக்குள் அடையாளப்படுத்து தல் தொடர்கிறது. பெண்களை இவ்வாறாக ஓரங்கட்டும் செயல் களை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.