states

img

அமெரிக்கக் கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் அபாயச் சங்கு இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம்

புதுதில்லி, அக். 12 -  இந்தியப் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவ தாகவும், வரும் காலத்தில் நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட வும் கூட வாய்ப்பிருப்பதாகவும் ஒன்றிய  அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அபாயச் சங்கு ஊதியுள்ளார். ஐந்து நாள் அரசுமுறை பயண மாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி ஆணையம் மற்றும் உலக வங்கி ஆண்டு கூட்டத் தில் பங்கேற்க உள்ளார். மேலும், ‘ஜி -  20’ நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர் களுடன் பேச்சுவார்த்தை, அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர், ஜப்பான், சவூதி  அரேபியா, தென் கொரியா, ஆஸ்தி ரேலியா நாடுகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை போன்ற நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக அமெரிக்கா சென்ற டைந்த நிர்மலா சீதாராமன், அமெரிக்க நிதித்துறை செயலாளர் எலானை சந்தித்து இந்தியாவில் நடைபெறவுள்ள அமெரிக்க - இந்திய பொருளாதார சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, வாஷிங்டன் புரூக்கிங்ஸ்  நிறுவனத்தில், “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” எனும் தலைப்பிலும் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, “வரும் காலத்தில் இந்தி யப் பொருளாதாரம் எதிர்கொள்ள வுள்ள முக்கிய பிரச்சனைகளில் முதன் மையாக இருப்பது, எரிசக்தியின் விலை மற்றும் அதனை பெறுவதில் உள்ள சிக்கல், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவற்றை பெறுவதில்  ஏற்படும் சிக்கல்தான்” என்று தெரி வித்துள்ளார். மேலும், “நாட்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற் படவும் வாய்ப்புள்ளது” என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். “பொது முதலீடு, தென்மேற்கு பருவ மழை, திறன் பயன்பாட்டில் முன்னேற் றம், வலுவான கார்ப்பரேட் இருப்பு நிலைகள், உற்சாகமான நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை மற்றும் குறைந்து வரும் அச்சுறுத்தல், திறன் பயன்பாட்டில் முன்னேற்றம் ஆகிய வற்றின் மூலமாக இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உருவாக்கி பொருளாதாரத்தைக் கட்டமைத்து வரு கிறது. அதேபோல், பல துறைகள் இப் போது தொற்றுநோய்க்கு முந்தைய செயல்பாட்டு அளவைத் தாண்டி விட்டது, தொற்றுநோயிலிருந்து மீள் வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால் தொற்று பரவலால் ஏற்பட்ட இடைவெளியில் இருந்து இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது” எனவும் பேசி யுள்ளார்.