திருவனந்தபுரம், மார்ச் 8- கேரள அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 11 காலை 9 மணிக்கு சட்டப்பேர வையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் வருவாயை அதிகரிப் பது மிகப்பெரிய சவாலாக இருக் கும். பெரும் வெள்ளம் மற்றும் கோவிட் சமயத்தில் வருவாய் வீழ்ச்சி அடைந் தது. செலவுகள் அதிகரித்தன. இந்த இடைவெளியைக் குறைப்பதே நிதி நிலை அறிக்கையின் குறிக்கோள். பட் ஜெட்டில் உற்பத்தித் துறை உள்ளிட்ட வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நடப்பு ஆண்டில் திருத்தப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.16,910 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ.19,759 கோடியாகவும், 2019-20இல் ரூ.15,462 கோடியாகவும் இருந் தது. மூன்றாண்டு வருவாய் இழப்பு ரூ.53,000 கோடி. கோவிட் பெருந்தொற் றைத் தொடர்ந்து, இரண்டு அவசர கால நிதி தொகுப்புகளுக்காக அர சாங்கம் கூடுதலாக ரூ.35,262 கோடி செலவிட்டுள்ளது. முதல் தொகுப்பில் மக்களுக்கு ரூ.26,362 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவது தொகுப்பில், சுகா தாரத் துறை மற்றும் நேரடி பண மல்லாத திட்டங்களுக்கு ரூ.8,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூடு தல் செலவுகள் மற்றும் வருவாய் இழப்பும் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் ரூ.88,300 கோடி கடன்கள் வந்துள்ளன. கோவிட் அச்சுறுத்தல் நீடிப்பதால் சுற்றுலாத் துறை மந்த நிலையில் உள்ளது. புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பும் நெருக்கடியில் உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் எரி பொருள் விலையை உயர்த்த அச்சு றுத்துகிறது .இது பணவீக்கத்தை அதி கப்படுத்தும்.
ஜிஎஸ்டியில் நம்பிக்கை இல்லை
ஒன்றிய அரசின் உதவிகள் குறை வதையும் பட்ஜெட் சமாளிக்க வேண் டும். ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீ லிக்கவில்லை. ஜனவரி வரை கேரளா வுக்கு ரூ.2,850 கோடி பாக்கி உள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடையும் இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்கா விட்டால், அடுத்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.12,000 கோடியாக இருக்கும். மத்திய வரிப் பங்கை 1.925 சதவிகிதமாகக் குறைப்பதால் அடுத்த ஆண்டு ரூ.13,217 கோடி வரு வாய் இழப்பு ஏற்படும். கோவிட் நெருக்கடி தொடர்ந்தால், வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும். அப்போது குறைந்தது ரூ.45,000 கோடியாவது கண்டுபிடித்தாக வேண்டும்.