தாத்தாவிற்கு (முன்னாள் பிரதமர் சரண் சிங் கிற்கு) பாரத ரத்னா விருதை கொடுத்து, “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகித்த ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியை தங்கள் பக்கம் இழுத்தது மோடி அரசு. ஆனால், ஜெயந்த் சவுத்ரி அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு நெருக்க மானவர்கள் மட்டுமே அவருடன் பாஜக கூட்டணிக்கு வந்துள்ள நிலையில், தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய தலைவர்கள் ஆர்எல்டி கட்சியில் இருந்து விலகி “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்கு பாடு படுவோம் என களமிறங்கியுள்ளனர். மோடியின் எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு அளிக்காததைக் கண்டித்து, அக்கட்சியின் பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் தாவியுள்ள னர். இதனால் பகுஜன் சமாஜ் உத்த ரப்பிரதேச அரசியலில் விலாசம் இல்லாத இடத்தில் உள்ளது. மேலும் மோடி அலையின் அதிருப்தி அலையை உணர்ந்தவர் கள், சீட் கிடைக்காதவர்கள் என பாஜக வைச் சேர்ந்த பல முக்கிய தலை கள் காங்கிரஸ் பக்கம் உருண்டோடி யுள்ளது. முக்கியமாக ராகுல் யாத்திரை யால் அப்னா தளம் (பல்லவி படேல்) உள்ளிட்ட பல்வேறு மாநில பிராந்திய கட்சிகள் “இந்தியா” கூட்டணிக்கு ஆத ரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வினாத் தாள் கசிவு, ராமர் கோவில், ஞான வாபி மசூதி உள்ளிட்ட வகுப்புவாத பிரச்சனைகளாலும், புல்டோசர் அர சியல் சம்பவங்களாலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறையாலும், சிறுமான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்ப வங்களாலும் உத்தரப்பிரதேத்தில் பாஜகவின் மீதான எதிர்ப்பு அலை மிக வலுவாக தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கை மூலம் வலுவான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி தொகுதிகள் 2 மடங்கு வீழும் என தகவல் வெளியாகியுள்ளது.