states

img

‘அறிவுக் கொழுந்துகள்’

திராவிட கட்சிகளால்தான் கோவை பூமி சூடானது என சொல்லி தமிழ்நாட்டு மக்களை  சிரிக்க வைத்தார் அண்ணாமலை. அவர் மட்டும் தான் அப்படி என எவரும் நினைத்துவிடக்கூடாது.  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு மோடி அரசு அமல்படுத்திய காரணத் தால்தான் தனக்கு இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததாக பாஜகவின் கங்கனா ரணாவத் கூறி யுள்ளார். இந்த சட்டம் 2029ல்தான் அமலாக்கப்படும் என மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  எதிர்க்கட்சிகள் 2024 தேர்தல்களிலேயே  அமலாக்கவேண்டும் என வலியுறுத்திய பொழுதும் மோடி அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. எனவே அமலாகாத சட்டத்தின் கீழ் எப்படி கங்கனா ரணாவத் வாய்ப்பு பெற்றார்? சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ்தான் என சொல்லி கதிகலங்க வைத்தவர் இவர்! நேதாஜி குடும்பத்தினர் உட்பட பலரும் அதை விமர்சித்த பொழுது 1943ல் அயலக இந்திய அரசு அமைந்த பொழுது  பிரதமராக போஸ் இருந்தார் என கூறினார். ஆனால் அவருக்கு எப்படி தெரியும்? 1915ம் ஆண்டே காபூலில் முதல் அயலக இந்திய அரசு அமைக்கப்பட்டதும் அதற்கு ராஜா மகேந்திர பிரதாப் ஜனாதிபதியாகவும் மவுல்வி பரக்கத்துல்லா பிரதமராகவும் இருந்தனர் என்பதும் கங்கணாவுக்கு தெரியவா போகிறது? பாஜக வேட்பாளர்களின் பொது அறிவும் அரசியல் அறிவும் மெச்சத்தகுந்தது.  தலைவன் எவ்வழியோ அவ்வழி தொண்டர்கள்!