states

img

குஜராத் பாஜக அமைச்சர் மகன் கைது

குஜராத் பாஜக அமைச்சர் மகன் கைது

ரூ.100 கோடி அளவில் மிகப்பெரும் மோசடி

குஜராத் முதலமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது,”நான் பிரதமர் பதவியில் அமர்ந்தால், இந்தியாவை குஜராத் மாடலாக மாற்றுவேன்” என கூறினார். ஆனால் மோடி பிரதமர் ஆன பின் அவருடைய செயல்பாடு, ஆட்சி நிர்வாகம், போலி பொருளாதார கொள்கை, மதவெறி பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் குஜராத் மாடலின் உண்மையான முகம் அம்பலமா னது. அதாவது முறைகேடு, ஊழல், போதைப் பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சாதிய வன் கொலைகள்  ஆகியவை தான் குஜராத் மாடலே தவிர, வேறு எந்த வளர்ச்சிக்கான மாடல் எதுவும் இல்லை என தெரியவந்தது. தற்போதைய சூழ்நிலையில் காட்டாட்சியின் கூடாரமாக இருக்கும் குஜராத் மாடலை தனது கட்சி (பாஜக) ஆளும் மாநிலங்களிலும் பிரதமர் மோடி விரிவுப்படுத்தி வருகிறார். இதனால் பாஜக ஆளும் மாநிலங்கள் அடிப்படை வசதி இன்றி தள்ளாடி வருகின்றன. மெகா முறைகேடு  இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MGNREGA) திட்டத் தின் கீழ் மிகப்பெரும் மோசடியை அரங்கேற் றியதாக பாஜக அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் பஞ்சாயத்து வேளாண்துறை அமைச்சராக இருக்கும் பச்சு பாய் கபாத்தின்  மகன் பல்வந்த் கபாத். இவர் தேவ்கத் பரியா தாலுகாவில் உள்ள குவா, ரெதானா மற்றும் தன்பூர் தாலுகாவில் உள்ள  சிமாமோய் ஆகிய 3 கிராமங்களில் மண் மற்றும் சாலைகள், கான்கிரீட் (CC) சாலைகள், தடுப்பணைகள் மற்றும் கல் தடுப்பணைகள் போன்ற திட்டங்களுக்கு டெண்டர் மற்றும் ஒப்பந்ததாரர் பணிகளை  கவனித்து வந்துள் ளார். 3 கிராமங்களில் 30% பணிகள் கூட நடை பெறவில்லை. சில இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை. பல டெண்டர்களுக்கு ஏலம் கூட எடுக்கவில்லை. ஆனால் பணிகள் முடிக்கப்பட்டதாக போலிப் புகைப்படங்களை ஏற்பாடு செய்தும், நிறைவுச் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப் பட்டும், தாலுகா மேம்பாட்டு அதிகாரி (TDO) தர்ஷன் படேல் மூலமாக மிகப்பெரும் மோச டியை நிகழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட ரூ.75 முதல் ரூ.100 கோடிக்கும் அதிகமான அளவில் முறை கேடு நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளன. கைது பொது நலத் திட்டத்தின் கீழ் நடந்த இந்த மோசடியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே கூட்டுச் சதி நடந்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாயத்து அதி காரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மாவட்ட வளர்ச்சி அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  அறிக்கையின் பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தீவிர விசாரணைக்குப் பின் சனிக்கிழமை அன்று தாஹோத் காவல்துறை பல்வந்த் கபாத் மற்றும் தாலுகா மேம்பாட்டு அதிகாரி (TDO) தர்ஷன் படேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணை மற்றும் சிறையில் அடைப்பதை தவிர்க்க பல்வந்த் கபாத் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.  மொத்தம் 35 நிறுவனங்கள் இந்த மோசடியில் மொத்தம் 35 ஒப்பந்த நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக தேவ்கத் பரியா வைச் சேர்ந்த 28 நிறுவனங்கள் மற்றும் தன்பூரைச்  சேர்ந்த 7 நிறுவனங்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல்வந்த் கபாத் மீது ஏற்கனவே விவசாய நிலங்கள் தொடர் பான முறைகேட்டில் சிக்கியவர் என்பது குறிப்பி டத்தக்கது.