states

img

அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் இந்திய வைரத் தொழிலுக்கும் பாதிப்பு!

கொல்கத்தா, மார்ச் 12- வைரத் தொழிற்துறையில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உல கின் 90 சதவிகித பட்டை தீட்டப் படாத வைரங்களை இந்தியா இறக்குமதி செய்து, பட்டை தீட்டி, மெருகேற்றுகிறது. அதில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் உக்ரைன் உடனான போரைக் காரணமாக வைத்து, ரஷ்யா மீது அமெ ரிக்க, ஐரோப்பிய நாடுகள்  விதித்துள்ள பொருளாதாரத் தடை யால், இந்திய வைரத் தொழில் பாதிக்கப்படும் நிலை உருவாகி யுள்ளது. ரஷ்யாவிலுள்ள அல்ரோசா தான், உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனமாக உள் ளது. உலகளவில் 30 சதவிகித பட்டைத் தீட்டப்படாத வைரங் களை உலக நாடுகளுக்கு விநி யோகிக்கிறது. இந்தியாவுக்கும் அதுவே முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. மேலும், கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு தற்போது தான் இந்திய வைரத் தொழில் துறை மீண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 84 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட இத்தொழில் துறை இலக்கு நிர்ணயித்தி ருந்தது. ஆனால், அமெரிக்கா வின் பொருளாதாரத் தடை நட வடிக்கையால், தற்போது அந்த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை,  வைரத் தொழில்துறை வளர்ச்சி யைப் பாதிக்கும் என்று ‘ரேட் டிங்’ அமைப்பான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.