states

நான்கு மாடி கட்டடம் இடிந்து 11 பேர் பலி

மும்பை, ஜூன் 28- மும்பையில் நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரி ழந்தனர்.  மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா நகரில் நான்கு அடுக்குமாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் திங்களன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் குடி யிருந்த 20 முதல்-25 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி யிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற மீட்புப்பணியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய  12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.  அடுக்குமாடி மிகவும் மோசமான, பாழடைந்த நிலை யில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;