states

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்குக! இபிஎஸ் ஓய்வூதியர்கள் தில்லியில் போராட்டம்

புதுதில்லி, டிச. 9 –  குறைந்தபட்ச ஓய்வூதிய மாக அகவிலைப்படியுடன் ரூ.9 ஆயிரம் ரூபாய் வழங்க  கோரி வியாழனன்று  புதுதில்லி யில் இபிஎஸ் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இபிஎஸ் ஓய்வூதியர் களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தகுதியுள்ளவர் களுக்கு உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த போரா ட்டத்தை ஆதரித்து நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம்.சண்முகம் (திமுக), எளமரம் கரீம், பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்), து.ரவிக்குமார் (விசிக), முகமது பஷீர் (இ.யூ. முஸ்லீம் லீக்), எம்.கே.ராகவன் (காங்கிரஸ்), என்.கே.பிரம சந்திரன் (ஆர்எஸ்பி) உள்ளிட் டோர் பேசினர். தமிழகத்திலிருந்து இபிஎஸ் 95 பென்ஷனர்ஸ் அசோ சியேஷன் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கே.பி.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.