புதுதில்லி, டிச.26- பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு உரையாற் றும் மன் கி பாத் நிகழ்ச்சி 84-ஆவது வாரமாக டிசம்பர் 26 அன்றும் நடைபெற்றது.இதில் வானொலியில் அவர் பேசியதாவது: எதிர்வரும் புத்தாண்டில் நாட்டை சிறந்த வழியில் நிர்மா ணிக்க காலத்தை விரையம் செய்யாமல் அனைவரும் செயல் பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தடத்தை எட்டியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸின் புதிய உருமாற்றத்துக்கு எதிராக விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். செயல்பட வேண்டும். விரைவில் தேர்வுகள் வரவுள்ளன. அதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் விரைவில் பரிக்ஸா பார் சர்ச்சார் வில் சேர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பாடங்க ளைப்பற்றி மாணவர்களுடன் நான் பரிக்ஸா பார் சர்ச்சாவில் உரையாடுவேன். இந்த ஆண்டும் தேர்வுகளுக்கு முன் மாண வர்களுடன் உரையாடுவேன். ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஆன்-லைனில் போட்டிகளும் நடத்தப்படும். திரைகளை பார்ப்பதில் நாம் செலவழிக்கும் நேரம் அதிக ரித்து வரும் வேளையில், நூல்களைப் படிப்பதில் பிடிப்பு அதி கரிக்க வேண்டும் என்ற திசையில் நாம் அனைவரும் இணைந்து முயல வேண்டும். சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் குரூப் கேப்டன் வருண் சிங், இந்த மாதம் தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர். மரணத்தோடு பல நாட்கள் வரை சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தினார். ஆனால் அவரும் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். பள்ளியில் சராசரியாக இருக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் மற்ற துறைகளில் சிறப்பிடம் பெற முடியும் என்பதை வருண் சிங் நிரூபித்துள்ளார் என்றார்.