states

img

காந்தி பாடத்தை அகற்றிவிட்டு சாவர்க்கர் பாடத்தை திணிக்கிறது தில்லி பல்கலை.

புதுதில்லி, மே 29- தில்லி பல்கலைக்கழகம் பிஏ (ஹானர்ஸ்) அரசியல் அறிவியல் பாடத் திட்டத்தின் ஐந்தாம் செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்த பாடத்தை நீக்கி விட்டு இந்துத்துவா தலைவர் வி.டி.  சாவர்க்கரைப் பற்றிய பாடத்தை  திணிக்க முயற்சி மேற்கொண்டுள்ள தாக ஆசிரியர்கள் சனிக்கிழமை கூறினர்.  இனி மூன்று ஆண்டு பட்டப்படிப் பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் காந்தியைப் பற்றி படிக்க மாட்டார்கள் என ஆசிரியர்கள் கூறினர். இதுதொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்த நடவடிக்கை கல்வியை காவிமயமாக்கும் முயற்சி மட்டுமல்ல  காந்தியையும் சாவர்க்கரையும் ஒப்பிடும் முயற்சி என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அகாடமி கவுன்சில் உறுப்பினர் அலோக் பாண்டே கூறுகையில், “முன்பு, ஐந்தாம் செமஸ்டரில் காந்தி குறித்த பாடமும், ஆறாம் செமஸ்டரில் அம்பேத்கர் பற்றிய பாடமும் இருந் தன.  இப்போது, சாவர்க்கரைப் பற்றிய கட்டுரையை அறிமுகப்படுத்தியுள்ள னர்.

காந்தியின் பாடத்தை நீக்கி விட்டு சாவர்க்கரை திணித்துள்ளனர். மூன்று ஆண்டு படிப்பைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இனி காந்தியைப் பற்றிய பாடத்தை படிப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், “நிலைக் குழுவில்  முன்மொழிந்த பாடத் திட்டத்தை எதிர்த்தேன், அவர்கள் காந்தி பற்றிய தாள் ஐந்தாம் பரு வத்தில் இருந்து நீக்கப்படாது என்று  உறுதியளித்தனர். ஆனால் இப்போது  கல்விக் கவுன்சிலில், நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர் என்றார். நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ராஜேஷ் ஜா,  “காந்தி யின் கருத்துக்கள்  நமது சுதந்திரப் போராட்டத்தின் கூட்டு நனவை பிரதி பலிக்கின்றன. அவரது தத்துவம் நல்ல அரசியல் மற்றும் நல்ல தனி நபர்களுக்காக நிற்கிறது. காந்தியின் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக முதல், இரண்டா வது செமஸ்டர்களில் காந்தி தொடர் பான பாடத்தை வைக்க வேண்டு மென்றார்”. தேசியக் கல்விக் கொள்கை யின் ஒரு பகுதியாகவே சாவர்க்கர்  குறித்த பாடம் திணிக்கப்படுவதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ள னர். இருப்பினும் மகாத்மா காந்தி தொடர்பான பாடங்கள் ஏழாவது செமஸ்டரில் இடம் பெறும் என சப்பைக் கட்டு கட்டியுள்ளது தில்லி பல்கலைக்கழகம்.