states

img

குஜராத்தில் வேகமெடுக்கும் ‘சண்டிபுரா வைரஸ்’ பரவல்

அகமதாபாத் கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், புதிய ஆட்கொல்லி வைர ஸான “சண்டிபுரா” வைரஸ் வடமாநிலங்க ளில் வேகமாக பரவி வருகிறது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாத தால் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் “சண்டி புரா” வைரஸ் பரவலால் உருக்குலைந்துள்ளது.  குஜராத்தின் 20 மாவட்டங்களில் “சண்டி புரா” வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி யுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 55-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக “சண்டிபுரா” வைரஸ் தாக்கத்தி னால் சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்த னர். சனியன்று மேலும் 9 பேர் உயிரிழந்த னர். இதன்மூலம் குஜராத்தில் “சண்டிபுரா”  வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திணறும் குஜராத் மாடல் :  கேரள மாடலில் பாடம் கற்க வேண்டும்

வடமாநிலங்களில் மட்டுமே “சண்டிபுரா” வைரஸ் பரவல் உள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது. இதில் குஜராத் மாநிலம் “சண்டிபுரா” வைரஸ் பரவலால் உருக்குலைந்துள்ளது. கேரளா, தமிழ்நாடு போன்று மோடியின் மாடலான குஜராத்தில் போதுமான அளவு மருத்துவ கட்டமைப்பு கிடையாது. இதன் காரணமாகவே “சண்டிபுரா” வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் பாஜக அரசு கடுமையாக திணறி வருகிறது.  டிரெண்ட் ஆகும் கேரள மாடல் கேரள மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிபா, குரங்கு காய்ச்சல் உள்ளிட்ட புதிய வகை வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் போன்று  நிபா, குரங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வழிகாட்டுதல் இல்லை. ஆனால் கேரள மாநிலத்தை ஆளும் இடதுமுன்னணி அரசு, ஒன்றிய அரசின் உதவியை கூட கோராமல் தைரியமாக பல அதிரடி முடிவுகளுடன்  நிபா,  குரங்கு காய்ச்சலை மாநிலத்தை விட்டு துரத்தியது மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் அசத்தியது. ஆனால் பாஜக ஆளும் குஜராத் அரசோ “சண்டிபுரா” வைரஸுக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் கூட அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் சமூகவலைத்தளங்களில் புதிய வைரஸ் கட்டுப்படுத்த கேரள மாடலில் இருந்து குஜராத் மாடல் பாடம் கற்க வேண்டும் என்ற கருத்துக்கள் கிளம்பியுள்ளன. 

10 மணிநேரத்தில் மரணம்

கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி (நாய், மாடு களில் காணப்படும்) உள்ளிட்டவற்றால் பரவும் “சண்டிபுரா” வைரஸ், மூளைக் காய்ச்சல் வகை குடும்பத்தைச் சார்ந்தது. இந்த வைரஸுக்கு பொதுவான அறிகுறிகள் எதுவும் கிடையாது. சாதாரண காய்ச்சலுடன் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள  குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் இந்த சண்டிபுரா வைரஸ் மனித உடலில் சென்றவுடன் 8-10 மணி நேரத்தில் உயிரை பறித்து விடும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தாலே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் ரத்த மாதிரி புனே தேசிய வைராலஜி நிறுவனத்தில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. இதனால் காய்ச்சல் அறிகுறி இருக்கும் பொழுதே குழந்தை களை காலதாமதமன்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.