தென்னிந்திய மாநிலங்க ளில் ஒன்றான தெலுங் கானாவில் நவம்பர் 30 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர் தல் பேரணி ஒன்றில் நிஜாமாபாத் பாஜக எம்.பி அரவிந்த் தர்மபுரி, உயிரோடு இருக்கும் தெலுங் கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்) குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்.பி., அரவிந்த் தர்மபுரி கூறிய தாவது,”பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கேசிஆர் காப்பீடு திட்டத்தின் கீழ் 56 வய துக்குக் குறைவான விவசாயி கள் மரணமடைந்தால், அவர் களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட் சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள் ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் கேசிஆர் இறந்தால் ரூ.5 லட்சமும், கேசிஆரின் மகன் ராமராவ் (கேடிஆர்) இறந்தால் ரூ.10 லட்சமாகவும், கேசிஆர் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட் சம் வழங்குவோம். கேசிஆரின் காலம் முடிந்துவிட்டது. எனவே, இளைஞர்கள் இறந்தால் தொகை யை அதிகப்படுத்தலாம்” என்று பேசினார். பாஜக எம்.பி அர விந்த் தர்மபுரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவிதா பதிலடி பாஜக எம்.பி அரவிந்த் தர்ம புரியின் கருத்துக்கு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகள் கவிதா வீடியோ மூலம் பதிலடி தந்துள் ளார். வீடியோவில் அவர் கூறிய தாவது,“அரவிந்த் தர்மபுரி எங்க ளுக்கு எதிராகப் பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. உங்கள் (மக்கள்) மகள்களுக்கு எதிராக அவர் இந்தக் கருத்து களை கூறினால், நீங்கள் அமைதி யாக இருப்பீர்களா? கேசிஆரின் மகன், மகள் என்பதற்காக இப்ப டித்தான் எங்களிடம் பேச வேண் டுமா என்பதை மக்கள் முடிவு செய் யட்டும். அவரின் பேச்சு “அன் பார்லிமென்ட்” வகையிலானது” என பதிலடி கொடுத்துள்ளார்.