states

மன்னராட்சியைப் புகழும் யுஜிசி நவ. 26 அரசியலமைப்பு தினத்தைச் சீர்குலைக்கும் மோடி அரசு

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்

பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக நிராகரிக்கிறது என அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமாரின் கடிதமானது, நமது இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு நேர் எதிரானது; நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட யுஜிசி சட்டத்தின் நிலையான விதிமுறைகளுக்கும் முரணானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குறிப்பிட்டுள்ளது.

“பண்டைய இந்தியா என்பது முழுவதும் ஒற்றை அடையாளம் கொண்டதாக இருந்தது என்றும் பண்டைய இந்தியாவில் எந்தவிதமான சர்வாதிகார ஆட்சியோ அல்லது முடியாட்சியோ நிலவவில்லை என்றும் யுஜிசி தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது மிகவும் அடாவடித்தனமான கருத்தாகும். நவீன ஜனநாயகத்தில் முன்னேற்றங்களுக்கு பெரும் சவாலாக இருப்பது வர்ணாசிரமம் மற்றும் சாதி அடிப்படையிலான சமூக ஆதிக்க கட்டமைப்பு ஆகியவையும்தான்; ஆனால் இத்தகைய கட்டமைப்பே இந்தியாவில் இல்லை என்று மறுக்கும் விதமாக யுஜிசி தலைவரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது மிகவும் மோசடியானதாகும்.

உயர்கல்வி துறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற அரசியல் சட்டப்பூர்வமான ஜனநாயக நடவடிக்கையை யுஜிசி தலைவர் நிராகரிக்கிறார்; தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆர்எஸ்எஸ் - பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ள - தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களிடம் யுஜிசி தலைவர் நேரடியாக அணுகுகிறார். இது தேசிய கல்விக் கொள்கையானது எப்படி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை சீர்குலைக்கவும் அறிவியல் மனப்பான்மை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை நிர்மூலமாக்கவும் ஒரு கருவியாக இவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது” என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. 

நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்டத் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய செயலை தடுத்து நிறுத்திட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஜனநாயக உள்ளம் கொண்ட தனிநபர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுதில்லி, நவ. 19 - நவம்பர் 26- அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, “இந்தியா: ஜன நாயகத்தின் தாய்” என்ற தலைப்பில் நாடு முழுவதும் 90 கல்வி நிறு வனங்களில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) சார்பில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கருத்தரங்குகள், ‘மன்னராட்சியின் மேன்மைகள்’, ‘வேதங்கள், மனு ஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணங்கள், சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ஜனநாயக சிந்தனைகள்’ என்று கருப்பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டி ருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கல்வியை காவிமயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த ஆபத்தான முயற்சி கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், ஜன நாயக சிந்தனையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜன நாயக குடியரசு என்று இந்திய அரசி யலமைப்பின் முகப்புரை கூறுகிறது. இங்கு குடியரசு என்பதற்கு அரசி யலமைப்பு வழியான சட்டத்தின் ஆட்சி என்று பொருள் கூறப்படு கிறது. தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி களும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சி நடத்த முடியும்.  அவர்களுக்கென தனித்த அதி காரங்கள் எதுவும் இல்லை. சட்டத் தின் மூலமாகவே அந்த அதிகாரத்தை அவர்கள் பெறுகிறார்கள். அந்த வகையில்தான் உலகின் தலைசிறந்த குடியரசாக இந்தியா மதிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோர் இந்த நவீன இந்தியாவின் சிற்பிகளாக விளங்குகின்றனர். 

யுஜிசியின் கடிதம்

இந்நிலையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஜனநாயக அமைப்புக்களைக் கொண்டிருந்ததாகவும், இங்கு மக்களாட்சி நடந்ததாகவும், சாதி, வர்ண, பாலின பாகுபாடுகளை முன் வைக்கும் மனு ஸ்மிருதி, குடிமக்கள் ஏன் என்று மக்கள் கேள்விகேட்க முடி யாத பழைய மன்னராட்சி முறை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்  என்ற சாணக்கிய நீதி ஆகி யவையே அந்த ஜனநாயக அமைப்புக் கள் என்றும் குறிப்பிட்டு, நாடு முழு வதுமுள்ள உயர் கல்வி நிறுவனங் களுக்கு கடிதம் எழுதியுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ‘நவம்பர் 26’ இந்திய அரசியலமைப்பு தின மாக கொண்டாடப்படும் நிலையில், வரும் ‘நவம்பர் 26’ அரசியலமைப் புத் தினத்தன்று, “இந்தியா: ஜன நாயகத்தின் தாய்” என்ற பெயரில் நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்; அந்த கருத்தரங்கு களில் மனு ஸ்மிருதி, சாணக்கிய நீதி, வேத, புராண, இதிகாசங்களில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பெருமை ஆகியவை குறித்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் ஆய்வுரைகள் நிகழ்த்தப் பட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக, பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission - UGC) தலை வர் எம். ஜெகதீஷ் குமார், 45-க்கும்  மேற்பட்ட மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் 45 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 90 கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், நவம்பர் 15 முதல் 30 வரை “இந்தியா: ஜனநாயகத்தின்  தாய்” (‘India: The Mother of Democracy’) என்ற தலைப்பில் இந்தியாவின் சனாதன கருத்தியலை கொண்டுசெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றிலிருந்து மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் விடு பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மாநில ஆளுநர்களுக்கும் எம். ஜெகதீஷ்குமார் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். 15 கருப்பொருட்களில் பல்கலைக்கழ கங்கள் இந்த கருத்தரங்குகளை நடத்த லாம் என்று கூறியிருக்கும் யுஜிசி தலை வர் ஜெகதீஷ்குமார், “அசோகரின் படை யெடுப்பின் போது கலிங்கத்தில் ‘கண ராஜ்யம்’ (மக்களாட்சி) இருந்தது”, “ஸ்ருதி,  ஸ்மிதி இதிஹாசா மற்றும் மஹாகாவ்யா நூல்களின் அடிப்படையில் பண்டைய சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ஜனநாயகத்தின் ஆட்சிக் கோட்பாடுகள்”, “அரசர்களின் ஜனநாயகம்: ஆதிகால இந்திய  ஜனநாயகங்கள்”, சமஸ்கிருத இலக்கி யத்தில்- பண்டைய மற்றும் இடைக்காலத் தமிழ்நாட்டின் கிராம சுயராஜ்யப் பாரம்பரி யம்”, “அர்த்தசாஸ்திரத்தில் பிரதிபலிக்கும் ஜனநாயக சிந்தனைகள் மற்றும் மரபுகள்” என்பன உள்ளிட்ட தலைப்புகளில் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், கௌடில்யம் (சாணக்கிய நீதி) மற்றும் பகவத் கீதையின் படி “இலட்சிய அரசன் (ராஜர்சி அல்லது சீர் ராஜா அல்லது தத்துவ மன்னன்)”, ‘லோக்தந்த்ரா’ (சுய-ஆட்சி), உலக ஜனநாயக அமைப்பின் முன்னோடி சிற்பிகளான ஹரப்பன்கள், காப் (கிராம) பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றின் ‘ஜனநாயக மரபுகள்’ என்ற தலைப்புகளையும் அளித்துள்ளார்.  இந்த தலைப்புகள் அனைத்தும், “பாரத்: லோக்தந்த்ரா கி ஜனனி” என்ற  தலைப்பில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி  கவுன்சில் (Indian Council of Historical Research - ICHR) வெளி யிட்டுள்ள நூலில் இடம்பெற்றுள்ள 30 அத்தியாயங்களிலிருந்து தொகுக்கப் பட்டு இருப்பதாகும். இந்த 30 அத்தியாயங் களையும் 30 பேர் எழுதியுள்ளனர். இதனையும் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஜெகதீஷ்குமார், “பாரதத்தில் வேத காலத்திலிருந்தே ஜனநாயக அமைப்புகள் பரிணமித்து வந்துள்ளன. பாரதத்தில் ஜனபதம் (மக்களாட்சி) மற்றும்  ராஜ்யம் (மன்னராட்சி) ஆகிய இரண்டு வகையான அரசுகள் இருந்தன. இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள பண்டைய ஆட்சி வடிவம் ஜனநாயகமானது, அது  முடியாட்சி என்ற பொதுவான நம்பிக்கைக்கு  மாறாக இருந்தது” என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR) குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

“கிராம அளவிலும் மற்றும் மத்திய அளவிலுமான ‘இந்திய அனுபவம்’ அரசியல்  மட்டங்களில் அதன் சொந்த நிர்வாக வடி வத்தைக் கொண்டிருந்தது. இது பஞ்சாயத்து  மற்றும் காப்ஸ் போன்ற ‘சுய-ஆட்சி நிறு வனங்களின்’ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.  இதுவே பின்னாளில் ‘ராஜ்ஜியங்கள் - பேரரசு களால், குறிப்பாக இந்து கலாச்சாரத்திற்கு விரோதமான படையெடுப்பாளர்களால்- பாதிக்கப்படாமல் இருக்க உதவியது. பண்டைய காலத்திலிருந்தே, இந்தியப் பகுதி  அல்லது பாரதத்திற்கு ‘புவி-கலாச்சார வரை யறை’ உள்ளது. இமயமலையின் தெற்கிலும், பெருங்கடல்களின் வடக்கே யும் அமைந்துள்ள நாடு பாரதம் என்றும், அந்த நாட்டினர் பாரதவாசிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.” சாதி அமைப்பு மற்றும் சமூகப் படிநிலைகள் இருந்தபோதிலும் - டாக்டர்  பி.ஆர். அம்பேத்கர் இதனை ‘தொழிலாளர் களின் பிரிவு’ என்று வர்ணித்தார் - சொல்லப்போனால், பிற பண்டைய நாகரிகங்களிலிருந்து பாரதத்தை பிரிக்கும் ‘முக்கிய வேறுபாடு’ இது. மேலும், இவை ‘சமூகத்தின் நலனை நோக்கிய சமூக அமைப்பு’ என்பதைக் குறிக்கும். ‘ஜன தந்திரம்’” என்பது “ஆட்சியாளர் மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பு” ஆகும்.

எதேச்சதிகாரம் அல்லது பிரபுத்துவம் இல்லாததால், பழங்கால இந்தியா தனித்துவ மானது, ஏனெனில் பிறப்பின் பெருமை, செல்வத்தின் செல்வாக்கு மற்றும் அரசியல்  பதவி ஆகியவற்றின் மீது நாட்டம் கொள்ளா தது அது. மேலும் ‘பாரதிய’ ஆட்சி பண்டைய ரோம் மற்றும் கிரீஸிலிருந்து வேறு பட்டது. இந்தியாவில் இறையாண்மை யானது ‘தர்மம்’ என்பதன் மீது குடி கொண்டுள்ளது. இந்தியாவில் பழங்கால ஆட்சி முறை யானது, மன்னராட்சி என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, ஜனநாயக முறையி லானது என்பதற்கு பல அறிகுறிகள் உள்ளன. தொல்பொருள், இலக்கியம், நாணயவியல், கல்வெட்டு, பக்தி மற்றும் பல வடிவங்களில், பாரதத்தின் லோக்தந்திரிக் மரபுகளை வலியுறுத்துவதற்கு அதிக சான்றுகள் உள்ளன. ராகிகர்ஹி மற்றும் சனௌலியில் சமீபத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி, மக்களின் சுயாட்சியின் வேர்கள் குறைந்தது கிமு 5000-க்கு முந்தையது என்பதை வெளிப்படுத்துகிறது” எனவும் ஐசிஎம்ஆர் கூறுவதாக ஜெகதீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசு மற்றும் பல்கலைக் கழக மானியக்குழுவின் இந்த கடிதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் ஆட்சி, ஆண்டான் - அடிமை முறை, சாதியப் படிநிலை, பெண்ணடிமைத்தனம் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றை புனிதப்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கைகள் நவீன ஜனநாயக சிந்தனைகளுக்கு எதி ரானது. பிற்போக்குத்தனமானது என்று கல்வி யாளர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

1947 ஆகஸ்ட் 29 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியாவுக்கான அரசியலமைப்பு வரைவை உருவாக்கி 1948 பிப்ரவரியில் வெளியிட்டது. இதன்மீது பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளைப் பெற்று 1948 அக்டோபரில் அரசியலமைப்பின் இரண்டாம் வரைவு வெளியிடப்பட்டது. அதன்பின்னர் 1948 நவம்பர் 4 அன்று அரசி யலமைப்பின் இறுதி வரைவு வெளி யிடப்பட்டது. இதனை 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு அவை ஏற்றுக் கொண்டது. எனினும், காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு, 1930 ஜனவரி 26 அன்று ‘முழு விடுதலை நாள்’ கொண்டாடியதை நினைவுகூறும் விதமாக, 1950 ஜனவரியில்தான் அரசி யலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு ஜனவரி 26 குடியரசுத் தினமாக கொண்டாடப்படுவது போல நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப் படுகிறது. விடுதலைப் போராட்டத்திலும், இந்தியாவை ஒரு குடியரசாக உரு வாக்குவதிலும் பங்காற்றாத ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டத்தினர், நவம்பர் 26- அரசியலமைப்பு (குடியரசு) நாளை அவமதிக்கும் வகையில், சனாதனம், முடியாட்சியின் ‘மேன்மை’ பேசும் நாளாக மாற்றும் சதித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.