சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
பேரிடர் நேரங்களிலும் பாஜக அரசியல் வித்தைகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் தயங்காமல் மேற்கொள்கிறது. 2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., பிரமோத் திவாரி
முன்னாள் இந்திய தரைப்படை தலைமை அதிகாரி அனில் சவுஹான், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஆபரேசன் சிந்தூர் குறித்து பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தினார். அவர் தெரிவித்ததற்கும், ஒன்றிய பாஜக அரசு தெரிவித்ததற்கு பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்திய மக்களை தொடர்ந்து தவறாக வழிநடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
ஏஐஎம்ஐஎம் செய்தி தொடர்பாளர் ஆதில் ஹசன்
கார் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய முடிவு எடுத்துள்ளோம். எங்கள் நோக்கம் பாஜக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வதுதான். ஒன்றாக இணைந்தால் பீகார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி சரியாகச் செயல்படவில்லை. சாதி அடிப்படையிலான மற்றும் வகுப்புவாத வெறுப்பு, வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை மற்றும் மக்கள் இடம்பெயர்வு அதிகளவில் ஏற்படுகிறது.