புதுதில்லி, நவ.27- 20 கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகர லாபம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனை செலுத்தாமலிருப்பது 62 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் கொள்கைகள், அவரது கூட்டாளிகளை வளப்படுத்தவும் வங்கிகளில் மக்களின் சேமிப்பை கொள்ளை யடிக்கவும் அனுமதிக்கிறது. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்களின் சேமிப்பைப் பாதுகாக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.