states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நடத்திய ஊர்வலத்தில் ஒருவர் கூட தேசியக்கொடி பிடித்து வரவில்லை. 53 வருடங்களாக தேசியக் கொடியை புறக்கணித்து வந்த இந்த சங்கிகள், இன்றும் புறக்கணிப்பை தொடர்கிறார்கள். நமது முன்னோரின் தியாகத்தில் விளைந்தது நம் தேசியக்கொடி. ஆர்எஸ்எஸ் என்றும் இதை புரிந்து கொள்ளாது.

சிவசேனா (உத்தவ்) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே

கனமழையால் பாதிக்கப்பட்டது மும்பையாக இருந்தாலும் சரி, புனேயாக இருந்தாலும் சரி, அரசாங்கம் சேத அளவிற்கு ஏற்றவாறு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். மாநிலத்தில் சரியான மேலாண்மை முறை முற்றிலும் இல்லை. சாலைகள் கூட தற்போதைய அரசியலின் நிலையைப் போலவே சீர்குலைந்துள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம் நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம். இதில் முக்கியமாக மூன்று அம்சங்களை ஆராய்ந்து வருகிறோம்.

திரிணாமுல் மூத்த தலைவர் குணால் கோஷ்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்கு வங்க பயணம் ஒன்றும் புதிதல்ல. தேர்தல் நேரம் வரும் போது அவர்களின் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும். ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால், அவர்கள் காலியாக வருவார்களா? இல்லை வேறு எதையும் கொண்டு வருவார்களா?