states

img

உ.பி.யின் மாபியா அரசியலுக்கு பாஜகவே காரணம்..!

லக்னோ, பிப். 28 - உத்தரப் பிரதேசத்தில் மாபியா அரசியலுக்கு பாஜக-தான் காரணம் என்று காங்கிரசின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி குற்றம் சாட்டினார்.  இதுதொடர்பாக செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிர மோத் திவாரி மேலும் கூறியிருப்ப தாவது: 1996-இல் பாஜக - பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, 21 அமைச்சர்கள் குற்றப் பின்னணி கொண்ட மாபியாக்களாக இருந்த னர். உத்தரப் பிரதேசத்தில் மாபியா வாதத்துக்கு காரணமாக இருந்தது  பாஜக-தான். மாநிலத்தில் அரசியல் கிரிமினல்மயம் ஆக்கப்பட்ட தற்கும் பாஜக.தான்  காரணம்.  2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதி களில் போட்டியிட்டாலும் 7 இடங் களில் மட்டுமே வெற்றிபெற்றது.  அப்போதே சட்டப்பேரவையில் குற்றவாளிகளை பாஜக களமிறக்கு கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி யது. ஆனால், அன்று முதல்வராக இருந்த தற்போதைய ஒன்றிய பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியலில் எல்லாம் சகஜம் என்று பதிலளித்தார்.  இவ்வாறு பிரமோத் திவாரி விமர்சித்துள்ளார்.