சண்டிகர் வடமாநிலங்களில் புகை யிலை, குட்கா பயன்பாடு மிக மோசமான அளவில் இருப்பது நாடறிந்த விஷயம். இத்தகைய சூழலில் பாஜக ஆளும் ஹரியானா மாநில அரசு புகையிலை, குட்காவிற்கு மாநில அளவில் தடை விதிக்காமல் போ தைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என ஒவ்வொரு கிராமமாக சோ தனை மேற்கொண்டு வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஹரியானா அரசு காவல்துறை யின் சிறப்பு பிரிவு மூலம் மாநிலம் முழுவதும் புகையிலை, குட்கா பயன்பாட்டு தடுப்பு நடவடிக்கை யில் இறங்கியுள்ளது. மாநிலத்தின் 77,536 கிராமங்களில் புகையிலை, குட்கா பயன்பாடு இருப்பதாகவும், சோதனை மூலம் 42% பகுதிகளில் விற்பனை தடுக்கப்பட்டு இருப்ப தாகவும் அம்மாநில அரசு கூறி யுள்ளது. ஆனால் எந்த விதத்தில் தடுக்கப் பட்டது? 42% கிராமங்களில் புகை யிலை, குட்காவிற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டதா? இல்லை, புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதா? இதைப் பற்றி ஹரியானா பாஜக அரசு விரிவாக கூறவில்லை. மாநில அளவில் புகையிலை, குட்கா தடுப்பு நடவடிக்கை மேற் கொண்டாலே கிராமம், கிராமமா கச் சென்று சோதனை நடத்த தேவை யில்லை. தடை விதிக்காமல் சோதனை நடத்துவது நகைப்பை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வ லர்கள் விமர்சித்து வருகின்றனர்.