states

img

மகாராஷ்டிரா முதல்வர் பதவி பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) இடையே மோதல் துவங்கியது

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்த லில் மொத்தமுள்ள 288 தொகு திகளில் பாஜக தலைமையி லான மகாயுதி கூட்டணி 230 தொகுதிக ளில் (பாஜக - 132, சிவசேனா (ஷிண்டே) -57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - 41)) வென்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், முதல்வர் பதவிக்கு பாஜகவும், சிவசேனாவும் (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) உள் ளிட்ட கட்சிகள் மோதல் போக்கை தொ டங்கியுள்ளன. தற்போது துணை முதல்வ ராக உள்ள பாஜக மூத்த தலைவர் தேவேந் திர பட்னாவிசை முதல்வராக்க வேண்டும் என பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.  பாஜக எம்எல்ஏ பிரவின் தரேகர், “பட்னாவிஸை அடுத்த முதல்வராக்க வேண்டும். கூட்டணியில் அதிக இடங்க ளைப் பெற்ற கட்சிக்கு முதல்வர் பதவிக்கு உரிமை உண்டு” என செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறி யுள்ளார்.  அதே போல, “தற்போது முதல்வ ராக உள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வ ராக நீடிப்பார்” என சிவசேனா (ஷிண்டே) செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மம்தாரே  தெரிவித்துள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வ ருமான அஜித் பவாரை முதல்வராக்க வேண்டும் என்று பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.  இவ்வாறு முதல்வர் பதவிக்கு பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால் மகாயுதி கூட்டணி சலசலப்பு ஏற்பட்டுள்ளது.