புதுதில்லி, மே 16- ஏறும் விலைவாசியை ஈடுகட்டக்கூடிய விதத்தில் குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பாதுகாப்பு ஆகி யவற்றை வலியுறுத்தி, பாகிஸ்தானில் நாடு தழுவிய அளவில் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துப் பாகிஸ்தான் ஐக்கிய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்திற்கு, இந்தியத் தொழிற் சங்க மையம் தன் ஒருமைப்பாட்டை யும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியத் தொழிற்சங்க மையமும், அனைத்துப் பாகிஸ்தான் ஐக்கிய தொழிற்சங்கங்கள் சம்மேளனமும் உல கத்தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருக் கின்றன. பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடன் நெருக்கடி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தான் மக்கள் நாளும் உயரும் பணவீக்கம், அதிகரித்துக் கொண்டிருக்கும் வேலையின்மை, வேலை இழப்புகள், உண்மை ஊதி யத்தில் கடும் வீழ்ச்சி முதலானவற்றால் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றின் விளைவாக பாகிஸ்தான் தொழி லாளர் வர்க்கம் தங்கள் வாழ்வாதாரங் களுக்காக என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களோ, தங்களுடைய கொள்ளை லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழிலாளர்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தொழிலாளர் வர்க்கம், பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத் தின் கோரிக்கை சாசனங்கள் அடங்கியப் பரிந்துரைகளை (கன்வென்ஷன்களை) உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தொழிற்சங்க உரிமைகளில் கொடூரமான முறையில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு சிஐடியு தன் முழுமையான ஒருமைப்பாட்டை யும், ஆதரவையும் தெரிவித்துக்கொண்டு ள்ளது. போராடும் பாகிஸ்தான் தொழி லாளர்களுக்கு ஆதரவாக, உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அங்கம் வகித்திடும் அத்தனைத் தொழிற்சங்கங்களும் தங்கள் ஒருமை ப்பாட்டைத் தெரிவித்திட வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சிஐடியு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)