states

அரசு ஊழியர்களின் அனைத்துவிதமான கிளர்ச்சிப் போராட்டங்களுக்கும் தடை விதித்திடக் கோருவதா?

புதுதில்லி, மார்ச் 23- அரசு ஊழியர்களின் அனைத்துவித மான கிளர்ச்சிப் போராட்டங்களுக்கும் தடை விதித்திடக் கோரும் மோடி அரசின் ஆணவப்போக்கிற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: அரசு ஊழியர்கள் எவ்விதமான கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என ஒன்றிய அரசாங்கம் ஆண வத்துடன் மிரட்டல் விடுத்து தடை  விதித்திருப்பதற்கு, சிஐடியு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர் பான அறிவுறுத்தல்களை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மார்ச் 20ஆம் தேதியன்று ஒன்றிய அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பி யுள்ள கடிதத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

மேற்படி அறிவுறுத்தலில், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு, தர்ணா போன்று கூட்டு வெளிப்பாட்டைத்  தெரி வித்திடும் எவ்விதமான வடிவத்தை யும் மேற்கொண்டு அதில் அரசு ஊழி யர்கள் பங்கேற்பதற்குத் தடை கோரி யிருக்கிறது. இவை அனைத்தும் ஜன நாயக ரீதியான கிளர்ச்சி நடவடிக்கை களாகும். இதுபோன்ற கிளர்ச்சி நட வடிக்கைகளில் ஈடுபடுவதற்குக்கூட அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து அச்சுறுத்தியிருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கி யுள்ள உரிமைகள் மற்றும் பணி நிலை மைகளின் அடிப்படையில் அரசு ஊழி யர்கள், தங்கள் நியாயமான உரிமை களுக்காக ஜனநாயக ரீதியாகப் போராடுவதை தடை செய்வதற்கான எதேச்சதிகார முயற்சியே தவிர வேறல்ல. மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் தொழிலாளர் விரோத, அரசு ஊழியர் விரோத நாசகரக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும், தொழி லாளர்களும் நாட்டின் அனைத்துப்பகு திகளிலும் பல்வேறுவிதமான போராட்ட நடவடிக்கைகளில் இறங்கி யிருப்பதால் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்னும் கோரிக்கை குறிப்பாக அரசு ஊழியர்கள் மத்தியில் இன்றையதினம் முன்னுக்கு வந்துள்ளது. இது மோடி அரசாங்கத்திற்கும், பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜக-வின் மாநில அரசாங்கங்களுக்கும் ஓர் அரசியல் சவாலாக எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அரசு ஊழியர்களின் ஜனநாயக ரீதியான கிளர்ச்சிப் போராட்டங் களின் அனைத்து வடிவங்கள் மீதும் தடை விதித்திட வேண்டும் என்று  ஆணவத்துடன் ஓர் அறிவுறுத்தலை அது வெளியிட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்ப விரும்பும் மாநில அரசுகளிடம், புதிய ஓய்வூதியத் திட்டத்திற் காக, ஊழியர்களிடம் இருந்து வசூலித்த தொகையை  மீண்டும் அவர்களிடம் திருப்பித்தராமல் கொடூரமான முறை யிலும், சட்டத்திற்குப் புறம்பான விதத்திலும் நிலையினை எடுத்திருக்கும் பின்னணியில்தான் மோடி அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.  

தேசிய கூட்டு நடவடிக்கைக் குழு (NJCA-National Joint Coucil of Action), பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரி, நாட்டின் மாவட்டத் தலைநகர் அனைத்திலும் பேரணி/போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில் அதனை முறியடித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் மோடி அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள ஆவேசப் போராட்ட அலைகளை இத்தகைய உத்தரவுகளால் தடுத்து நிறுத்திட முடியாது. இவர்களின் போராட்டத்தின் விளைவாக நாட்டில் சில மாநிலங்க ளில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப் பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் பெற்றிட அரசு ஊழியர்கள் தங்கள் ஒன்றுபட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு போரா டும் ஊழியர்களுக்கு சிஐடியு முழுமையான ஆதரவை அளித்திடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.  (ந.நி.)