states

தொடரும் இந்துத்துவா குண்டர்களின் அட்டூழியம்

புதுதில்லி,ஏப்.8- 2014-ஆம் ஆண்டு மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியில் அமைந்த  பின்பு ஒவ்வொரு நாளும் சிறும்பான் மையினர், தலித் மக்கள் மீது பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி வரு கின்றனர். குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்த லை எதிர்கொள்ளவிருக்கும் மாநி லங்களில் இந்துத்துவா குண்டர்கள் சமீப காலமாக அதிகளவில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் முஸ்லீம் மற்றும் தலித் மக்கள் மீது வன்முறையை அரங்கேற்றி அவர்க ளது சொத்துக்களை சூறையாடியுள்ள னர்.  இந்நிலையில், மதமாற்றம் செய்கி றார்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் மீதும் இந்துத்துவா குண்டர்கள் தாக்கு தலை தொடங்கியுள்ளனர். கிறிஸ்த வர்களின் மீதான இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடைபெறுவது ஏற்கெனவே இருந்தது, சமீபகாலமாக மிகமோசமான அளவில் அதிகரித்து வருகிறது. தேவாலயங்கள் மீது கற் களை வீசுதல், தீ வைத்தல், அமைதி யாக நடைபெறும் பிரார்த்தனைக் கூட் டங்களில் புகுந்து மதமாற்றம் நடை பெறுகிறது எனக் கூறி பாதிரியார் கள், கிறிஸ்தவ மக்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்துதல்,  பாதிரி யார்களை காவல்துறையின் உதவியு டன் கைது செய்தல் ஆகியவை நடந்து வருகின்றது. இதனால் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு பொழுதையும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். மத்தியப் பிரதேசம்  பாஜக ஆளும் மத்தியப் பிரதே சத்தின் இந்தூரில் அமைதியாக பிரார்த்தனை நடைபெற்ற ஒரு வீட் டிற்குள் இந்துத்துவா குண்டர்கள் நுழைந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டனர்.  பிரார்த்தனையில் இருந்த கிறிஸ்தவ மக்கள், மீது தாக்கு தல் நடத்தி நாற்காலிகள் மற்றும் இசைக்கருவிகளை உடைத்து நொறுக்கினர்.

உத்தரப்பிரதேசம் 

பாஜக ஆளும் மற்றொரு மாநில மான உத்தரப்பிரதேசத்தின் காஜிபூரில் பாஜக தலைவர் யோகேஷ் சிங் தலை மையிலான இந்துத்துவா குண்டர்கள் மாநில காவல்துறையின் உதவியுடன் பிரார்த்தனை கூட்டத்திற்குள் புகுந்து இடையூறு செய்துள்ளனர்.  மேலும்  மதமாற்றம் செய்ததாக காவல்துறை யில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதே போல ராய்பரேலி பகுதி யில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்த னை கூட்டத்தில் புகுந்த பாஜக குண் டர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பின்னர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக காவல் துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிறிஸ்தவர்கள் பலரை கைது செய்துள் ளனர். 

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜா ரில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் துர்கேஷ் தேவாங்கன் என்ற  நபர் கிறிஸ்தவ விரோத வெறுப்பு உரையை நிகழ்த்தினார். உரையில்,“பொருளாதாரத்தில் நலி வடைந்தவர்களை சாதகமாக பயன் படுத்தி, அவர்களை முட்டாளாக்கி மத மாற்றம் செய்யும் மிஷனரிகள், பாதிரி யார்களை கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க அனைவரும் தயாராக வேண்டும். முக்கியமாக பாதிரியார்கள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் எனவும், அவர்க ளுக்கு எதிரான வன்முறைகளும் ஊக்கு விக்கப்பட எனவும்” வெறித்தனமாகப் பேசினார். மேலும் வன்முறையைத் தூண்டும் முழக்கத்தையும் எழுப்பி னார். “பெஹ்லே ரோகோ, ஃபிர் டோகோ, அவுர் நஹி சுனே தோ தோகோ (முதலில் அவர்களை நிறுத்துங்கள், பின்னர் திட்டுங்கள், அவர்கள் கேட்க வில்லை என்றால் அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்)” என மதவெறியுடன் கூவினார். 

கண்டு கொள்ளாத காவல்துறை

பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடுக்கும் இந்துத்துவா குண்டர்கள் மீது வழக்குத் தொடர காவல்துறை அதி காரிகள் தயாராக இல்லை. உண்மை யில் ஆளும் பாஜக அரசின் ஆதரவு, காவல்துறை உதவியுடனேயே  கிறிஸ்த வர்களுக்கு எதிராக தாக்குதல் அரங் கேறி வருகிறது. அத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களில் பாதிரியார்கள் தேவாலயத்திற்குள் நுழைவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் கட்டுப் பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.