இந்தியாவும் சீனாவும் இருதரப்பு உறவுகளை நீண்ட கால கண் ணோட்டத்தில் கையாள வேண் ்டும் என சீன வெளியுற வுத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. கடந்த பல ஆண் டுகளாக சீனாவுட னான இந்திய உறவு குறித்து மும்பையில் ஒரு நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர், கடந்த கால கொள்கை வகுப்பாளர்களின் தவ றான புரிதலால் இலட்சியம் அல்லது உண்மையான அரசியல் இல்லாத நிலை யில் தள்ளப்பட்டாலும், சீனாவுடன் ஒத்து ழைக்கவோ அல்லது போட்டியிடவோ அவை உதவவில்லை என குறிப்பிட்டார். மேலும் பரஸ்பரமான நம்பிக்கை, மரியாதை ஆகியவை இரு தரப்புக்கும் இடையிலான உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பு உறவுகளின் நீண்ட கால பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார். 2020 க்குப் பிறகு இரு நாட்டு எல்லை யில் உருவான பதற்றத்தில் இருந்து இந்தியா-சீனா உறவு துண்டித்துக் கொள்ள முயற்சிப்பதாகவும், இந்நிலை யில் பல ஆண்டுகளுக்கு இருநாட்டு உறவு தொடர்வது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார். இவ்வாறு ஜெய்சங்கர் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகு பாரம்பரியம்மிக்க இரண்டு முக்கியமான வளரும் நாடுகளாகவும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக வும் உள்ள சீனாவும் இந்தியாவும் வளர்ச்சி யில் கவனம் செலுத்தி, ஒத்துழைப்பில் ஈடுபட வேண்டும் என கூறினார். மேலும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நீண்ட கால வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் இருதரப்பு உறவையும் கையாள வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடை யிலான உறவுகளை ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதை யில் கொண்டு செல்ல வேண்டும். மேலும் அண்டை நாடுகளாக உள்ள நமது இரு பெரிய நாடுகளும் நல்லிணக்கத்துடன் வாழவும், இருதரப்பின் வளர்ச்சியையும் மேம்படுத்த சரியான பாதையையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரி வித்தார். இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளிலும் உள்ள 2.8 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பயன்படும். இத்தகைய ஒத்துழைப்பு பிராந்திய நாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். உலகளாவிய தெற்கு நாடுகளின் வர லாற்றுப் போக்குடன் வலுவடையும். மேலும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.