states

img

ஏரியில் மூழ்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம்

சென்னை,அக்.22-  சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் பலியாகினர். இவர் களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி வீரக்கல் கிராமம், வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணிதுவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம்  ரூபாய் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து வழங்கிட வும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.