சண்டிகர், ஜன.18- பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி தேர் தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட் சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் போட்டி, பாஜக-வுக்கு நான்காவது இடமே கிடைக் கும் என்று ஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் முதல் வர் சரண்ஜித் சன்னியின் நெருங் கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10 இடங்க ளில், ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தியுள் ளது. சட்ட விரோதமாக மணல் அள்ளியது, குவாரிகள் நடத்துவது தொடர்பாக முதல்வரின் உறவி னர் வீடுகளில் இந்த சோதனை நடத் தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற் காக வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்பு களை பாஜக பயன்படுத்துகிறது. அதுதான் இப்போதும் நடக்கிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. “அவர்கள் (பாஜகவினர்) என்னை குறிவைத்து, வரும் தேர்த லில் அழுத்தம் தருவதற்காக சோதனை நடத்துகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்ல தல்ல. நாங்கள் சண்டையிட தயா ராக உள்ளோம்” என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார்.