லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் காலி யாக உள்ள 9 தொகுதிக ளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 9 தொகுதிக ளின் வாக்கு எண்ணிக்கை முடி வில் பாஜக 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பாஜகவின் கூட்டணி கட்சியான ஆர்எல்டி ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இடைத் தேர்தல் நடைபெறும் வரை அமை தியாக இருந்த உத்தரப்பிரதேச பாஜக அரசு, தேர்தல் முடிந்தவு டன் மீண்டும் வகுப்புவாத வன் முறையை தூண்ட ஆரம் பித்துள்ளது. அதாவது சம்பல் பகுதியில் உள்ள ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்து கோவிலை இடித்து ஷாஜி ஜமா மசூதியை கட்டியிருப்பதாக நீதி மன்றத்தில் இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்த னர். இந்நிலையில், நீதிமன்ற உத்த ரவுப்படி என்று கூறி உத்தரப்பிர தேச அரசு அதிகாரிகள் குழு ஞாயி றன்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அப் பொழுது நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் திரண்டு, மசூதி யில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரி வித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் மிரட்டினர். இடையில் மசூதி பகுதியில் இருந்த இந்துத்துவா குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முஸ்லிம் மக்கள் பதில் தாக்குதல் தொடுக்க சம்பல் பகுதியில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து போ லீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்,துப்பாக்கி சூடு நடத்தியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர். இந்த வன் முறை சம்பவத்தால் சம்பல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை பதற்றம் நீடித்து வருகிறது.