லக்னோ, மார்ச் 10- வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை செய்திருந்தார். இதற்காக, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறி யுள்ளார். உ.பி. தேர்தல் வாக்குப்பதிவு செய் யப்பட்டிருந்த மின்னணு இயந்தி ரங்கள், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு தெரியாமலேயே, இடமாற்றம் செய் யப்பட்டன. அடையாள அட்டை எது வும் இல்லாத ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சுமார் 4 மணிநேரம் இருந்த தும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், சமாஜ்வாதி கட்சியி னர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதன் தலைவர் அகி லேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், “இந்திய தண் டனை சட்டத்தின்படி (IPC), வதந்தி களை பரப்புதல், பொதுமக்களை தவ றாக வழிநடத்துதல், தவறான தக வல்களை வழங்குதல், கடுமையான குற்றங்களின் பிரிவின் கீழ் வரக்கூடி யது ஆகும். அகிலேஷ் கண்மூடித்தன மாக இதுபோன்ற குற்றங்களை செய்கி றார். வதந்தி பரப்பியதற்காக அகி லேஷ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். அவரை (அகிலேஷ்) கம்பிக்கு பின்னால் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ஹர் நாத் சிங் கூறியுள்ளார்.