states

img

தலித் பெண்ணை சாதி ரீதியாக துன்புறுத்திய பாஜக எம்எல்ஏ

மகாராஷ்டிரா மாநிலம் தானே  மாவட்டத்தில் உள்ள கல்யாண்  தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கண்பத் கெய்க்வாட். இவர் தவார்லி கிராமப் பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவரை சாதி ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக துன்புறுத்தலுக்குள்ளாகிய தலித் பெண் கடந்த ஜனவரி மாதம் கண்பத் கெய்க்வாட் மீது புகாரளித்த நிலையில்,  தானே போலீசார் பெயரளவிற்கு வழக்  குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்  ளாமல் இருந்தனர். இந்நிலையில், நிலத்  தகராறு தொடர்பாக சிவசேனா (ஷிண்டே) மூத்த தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது  வெள்ளியன்று கண்பத் கெய்க்வாட் எம்எல்ஏ காவல்நிலையத்திலேயே துப்  பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாய மடைந்த மகேஷ் கெய்க்வாட் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக  எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ள நிலையில், தலித் பெண்ணை சாதி  ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தையும் சேர்த்து விசாரிக்க தானே போலீசார் முடிவு செய்துள்ளனர்.