states

‘ஜம்மு - காஷ்மீரை பாஜக தனது ஆய்வுக்கூடமாக மாற்றியுள்ளது!’

புதுதில்லி, ஜூன் 24 - ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித்  தலைவருமான மெகபூபா முப்தி, சனிக்கிழ மையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்ப தாவது: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஜம்மு- காஷ்மீர் போல் மாற்றி விடும். உண்மை யில் இது இந்தியாவின் மீதான அடி. முத லில் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டவிதி 370-இன் கீழ் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கினர். பின்னர், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் உள்பட பல தலைவர்களை சிறையிலடைத்தனர். ஜம்மு-காஷ்மீர் அவர்களுக்கு ஒரு ஆய்வுக்கூடமாக இருந்தது. தில்லி (கெஜ்ரிவால் அரசு) இன்று சந்திக்கும் அவசரச் சட்டம் போன்ற பிரச்  சனைகள் ஜம்மு - காஷ்மீரில் முன்னதா கவே தொடங்கி விட்டன. 2024 நாடாளு மன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு நசுக்கப்படும். ஒட்டுமொத்த இந்தியாவின்  நிலையும் தற்போது உள்ள காஷ்மீரின்  நிலைக்கு மாறிவிடும்.இவ்வாறு மெக பூபா முப்தி எச்சரித்துள்ளார்.