states

img

மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர்  சிலை நிறுவ பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

ஜபல்பூர், குவாலியர், இந்தூரில் பதற்றமான சூழல்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 3 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. ஜபல்பூரில் முதன்மை யான உயர்நீதிமன்றமும், இந்தூர் மற்றும் குவாலியரில் உயர்நீதிமன்ற கிளைகளும் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில், குவாலியரில் உள்ள உயர்நீதி மன்ற வளாகத்தில் சட்டமேதை டாக்டர்.பி.ஆர். அம்பேத்கரின் சிலையை நிறுவ ஜனநாய கத்தின் மீது நம்பிக்கை கொண்ட வழக்கறி ஞர்கள் குழு ஏற்பாடு செய்தனர். பிப்ரவரி 19 ஆம்  தேதி வழக்கறிஞர்கள் குழு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை  நீதிபதி சுரேஷ் குமாரை சந்தித்து, அம்பேத் கரின் சிலைக்கு ஒப்புதல் கோரி ஒரு குறிப்பா ணையை சமர்ப்பித்துள்ளனர்.  தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பிறகு ஒரு உள்ளூர் குழு அமைக்கப்பட்டு குவாலியர் பெஞ்ச் வளாகத்திற்குள் சிலை அமைக்க மேடை கட்டும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் சிலை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் மே இரண்டாம் வாரத்தில் இரண்டு  முறை இருதரப்பு வழக்கறிஞர் குழுக்களிடை யே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்  வெள்ளிக்கிழமை தொடர்ந்து நடைபெற்றதா கவும், வழக்கறிஞர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. மேலும் இந்த அம்பேத்கர் சிலை தொ டர்பான பிரச்சனையால் ஜபல்பூர், இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள உயர்நீதிமன்றங்க ளிலும், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்களிடையே மோதல் சம்பவம் ஏற்படுவது போன்ற பதற்றச் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.  

ராஜஸ்தானில் உள்ள மனுவின் சிலையை அகற்றுங்கள்

பீம் ஆர்மியின் தேசியத் தலைவர் சத்பால் தன்வார் கூறுகையில்,”குவாலியர் உயர்நீதி மன்ற கிளையில் அம்பேத்கரின் சிலையை நிறுவ அனுமதிக்கப்படாவிட்டால் பீம் சேனா ஆர்வலர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் கிளையில் கூடி, முனிவர் மனுவின் சிலையை அகற்ற போராட்டம் நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று மத்தியப் பிரதேச காங்கி ரஸ் செய்தித் தொடர்பாளரும், முன்னாள்  எம்எல்ஏவுமான சைலேந்திர படேல், ”அம்பேத்கரின் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது “இந்திய அரசியலமைப்பை” அவமதிக்கும் செயல் போன்றதாகும். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். போராட்டம் நடத்துவோம்” என கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ”வழக்கறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்களின் நிதி உதவியுடன் அம்பேத்கரின் சிலை நிறுவ அனுமதி வழங்கி யது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ், குவாலியர் பெஞ்சின் வளாகத்திற்குள் ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மேடை கட்டப் பட்டுள்ளது. இருப்பினும், சாதியக் கருத்துக்க ளைக் கொண்ட சில வழக்கறிஞர்கள் சிலை  நிறுவலை எதிர்க்கின்றனர். அதனால் மத்தி யப்பிரதேச ஆளுநர் மற்றும் முதலமைச்சர்  தலை யிட்டு சிலை நிறுவலை எளிதாக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.