states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜார்க்கண்டில் வன்முறையை கிளப்ப பாஜக புதிய இயக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் “இந்தி யா” கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல மைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார்.  இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றவும், அதற்காக மத வன்முறையை கிளப்பவும் பாஜக புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஜேஎம்எம் கட்சியில் இருந்து தாவிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்ச ரான  சம்பாய் சோரன்,”மாநிலத்தில் பழங் குடியினரின் மத மாற்றம் மற்றும் மாநிலத்தில் வங்கதேச ஊடுருவலுக்கு எதிராக ஒரு தீர்க்கமான இயக்கத்தை தொடங்க உள்ளேன். இந்த இயக்கம்  ஜூன் 30 ஆம் தேதி சந்தால் பர்கானாவிலி ருந்து ‘ஹல் திவாஸ் (புரட்சி நாள்) அன்று தொடங்கப்படும்” என அவர் கூறினார்.  சம்பாய் சோரன் அறிவித்துள்ள இயக்க அறிவிப்பு மூலம் ஜார்க்கண்டில் மாற்று மதத்தைச் சேர்ந்த பழங்குடி யினர்களை ஒடுக்கவும், முஸ்லிம் மக்களை விரட்டவும், மதவன்முறையை கிளப்பும் நோக்கத்திலேயே பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக “இந்தியா” கூட் டணிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை?

தில்லியின் துக்ளகாபாத்தைச் சேர்ந்த ரோஷன் சர்மா (23). இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இத்த கைய சூழலில் வியாழக்கிழமை அன்று  அதிகாலை ரயில் பாதைக்கு அருகிலுள்ள  புதர்களில் ரோஷனின் உடல் கண்டெ டுக்கப்பட்டது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ரோஷன் விஷப் பொருளை உட்கொண்டது தெரிய வந்தது. தச்சராக வேலை செய்யும் ரோஷ னின் தந்தை ரஞ்சித் சர்மா அடையாளம் காட்டிய பின்பே 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தது ரோஷன் என்பது அடையா ளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.