புதுதில்லி, மார்ச் 4 - “அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை நதிகளுடன், கண்ணுக்கு புலப்படாத வகையில் சரஸ்வதி நதியும் வந்து கலக்கிறது” என்ற நம்பிக்கை இந்து மதத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவின் புதிய தலை முறையினர் இதனை நம்பு வதில்லை என்றும், அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சலித்துக்கொண்டுள் ளார். தலைநகர் தில்லியில் நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழா வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகை யில் பேசியதாவது: தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மோகன் பகவத் இது தொடர்பாக பேசியிருப்பதாவது: இந்தியாவை உலகத்தின் முன்நிற்க வைக்க வேண்டும், அதை ‘விஷ்வ குரு’ ஆக்க வேண்டும், இந்தியாவின் நற்பெயரைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், பழங்கா லத்திலிருந்து இன்று வரை அதன் தொன்மையையும் உண்மை யையும் நிலை நாட்டவேண்டும். மங்களகரமான சரஸ்வதி நதி இருந்தது என்றும் அது இன்றும் உள்ளது என்றும் நம்பும் ஒரு பிரிவினர் உள்ளனர். ஆனால் நமது புதிய தலை முறை ஆதாரத்தைக் கோரு கிறது. ஏனென்றால் நமது கல்வி முறை நம்பிக்கையை(?) வளர்க்கவில்லை. மக்கள் நம்பு வார்கள். ஆனால் அறிஞர்கள் நிரூபிக்க வேண்டும். புதிய தலைமுறையின் பாடப்புத்த கங்களில் இதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். முன்னர், ராமர் சேது பற்றி நாம் பேசும்போதும் மக்கள் அதைக் கிசு கிசு என்று நினைத்தார்கள். பின்னர் ஆதாரம் வந்தது. இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.