states

img

அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பேமா கண்டு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்த லுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடை பெற்றது. சட்டமன்றத்திற்கான வாக்கு  எண்ணிக்கை ஜூன் 2 அன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி 54 (பாஜக - 46, என்பிபி  - 5, என்சிபி (அஜித்) - 3) தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி 3  (காங்கிரஸ் -1, பிபிஏ - 2) இடங்களை யும், சுயேட்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக கூட்டணி கட்சி களின் கூட்டத்தின் முடிவில் அருணாச்சல  பிரதேச முதல்வராக பெமா காண்டு மீண்  டும் தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், வியாழனன்று இடா நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழா வில் அருணாச்சல பிரதேச முதல்வராக  3ஆவது முறையாக பேமா கண்டு பதவியேற்றுக் கொண்டார். பாஜகவை சேர்ந்த பேமா கண்டுவுக்கும், அமைச் சர்களாக பதவியேற்ற 11 பேருக்கும் ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.