states

புதுதில்லி “சிபிஐ” “அமலாக்கத்துறை” பெயர்களை “பாஜக ராணுவம்” என மாற்றலாம்: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை “பாஜக ராணுவம்” என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில்: “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை “பாஜக ராணுவம்” என மாற்ற வேண்டும். முன்பெல்லாம் இந்த அமைப்புகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அவர்கள் சோதனை செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ, தவறு நடந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், தற்போது இந்த அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.