புதுதில்லி,டிச.28- பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். லூதியானா கீழமை நீதிமன்றத்தில் டிசம்பர் 23 அன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதில் ஒருவர் உயிரிழந்தார். இவர் லூதியானாவை சேர்ந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமைக்காவலரான ககன்தீப் சிங் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தடை செய்யப் பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம்எழுந்துள்ளது. அதில் ஒருவர் ஜெர்மனியிலும், மற்றொரு நபர் பாகிஸ்தானிலும் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அந்த நாடுகளின் அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெர்மனியில் எஸ்.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் முல்தானி (வயது 45) என்ற நபரை ஜெர்மனி நாட்டின் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படு கிறது. இது குறித்து ஜெர்மனி காவல்துறையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து காவல்துறை சிறப்புப் படையினர் ஜெர்மனி சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.