states

img

பாதுகாப்பில்லா நகரமாகிறதா தில்லி? மேலும் ஒரு இளம்பெண் அடித்துக் கொலை

புதுதில்லி, ஜூலை 29- தில்லி மாளவியா நகரில் பட்டப்பகலில் இளம்பெண் இளைஞர் ஒருவரால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே ஆள்நட மாட்டம் அதிகமுள்ள உள்ள ஒரு பூங்கா வில் இளம்பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், “உயிரிழந்தவர் கமலா நேரு கல்லூரியை சேர்ந்த நர்கீஸ் (25 வயது) என்ற மாணவி என தெரியவந்தது. இர்பான் என்ற இளைஞர் நர்கீஸை திருமணம் செய்து கொள்ள விரும்பு வதாகவும், நர்கீஸின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் இர்பானுக்கு நர்கீஸ் சகோதரி முறை வேண்டுமென்ப தால், நர்கீசின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் நர்கீஸ் இர்பா னுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த இர்பான் பூங்காவில் மாணவி நர்கீஸை இரும்பு கம்பியால் அடித்தே கொன்றுள்ளார்” என தெற்கு தில்லி காவல்துறை துணை ஆணையர் சந்தன் சௌத்ரி தகவல் தெரிவித்துள்ளார். கொலையாளி இர்பானை போலீசார் கைது செய்தனர்.

24 மணிநேரத்தில்  2-ஆவது சம்பவம்

வியாழனன்று இரவு தில்லி தாப்ரி பகுதி யில் திருமணம் ஆன 42 வயதுமிக்க ரேணு கோயல் என்ற பெண்ணை அவரது இளம் வயது ஆண் நண்பரான ஆஷிஷ் (23) என்ப வர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த அதிர்ச்சி மீள்வதற்கு முன் அடுத்த 24 மணிநேரத்திற்குள் நர்கீஸ் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகளிர் ஆணையம் கண்டனம் 

“மாளவியா நகர் போன்ற ஆடம்பரமான பகுதியில், ஒரு பெண் கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். இதன்மூலம் பாதுகாப் பற்ற பகுதியாக தில்லி மாறி வருகிறது. பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக குற்றச் சம்பவம் அரங்கேறினால் செய்திகளில் பெண் மற்றும் சிறுமிகளின் பெயர்கள் மாற்றப் படுகின்றன. குற்றங்கள் நிற்கவில்லை” என தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.