states

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா தாக்கல்

புதுதில்லி, நவ.27- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ரின் முதல்நாளில் வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பணிந்து ,பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறி வித்தார். ஆனால் நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்தால்தான் போராட்டக்களத் திலிருந்து வெளியேறுவோம்; அதுவரை போராட்டக்களத்தில்தான் இருப்போம் என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்து, போராட்டத்தை தொடர்கின்றனர்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 27 சனிக்கிழமையன்று செய்தி யாளர்களை சந்தித்த ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறி யதாவது:

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் நாளில் (நவ. 29) நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பயிர் பல்வகைப்படுத்தல், ஜீரோ-பட்ஜெட் விவ சாயம் மற்றும் எம்எஸ்பி முறையை மிக வும் வெளிப்படையானதாகவும் பயனுள்ள தாகவும் மாற்றுவது போன்ற பிரச்சனை களை விவாதிக்க ஒரு குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் விவசாயிகள் அமைப்பு களின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் பயிர்களை எரிப்பதை குற்றமாக கருதுவதாகவும், அதை தவிர்க்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை யை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. வேளாண் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பய னும் இல்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீட் டுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தின் போது பதிவு செய்யப் பட்ட வழக்குகளைப் பொறுத்த வரை, அது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.அதை மாநில அரசுகளே முடி வெடுக்கும். அதுபோல, மாநில கொள்கை யின்படி இழப்பீடு வழங்குவது குறித்தும் மாநில அரசுகள் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

;