states

img

அடாவடி ஆளுநருக்கு ஒரு திறந்த மடல்! - க.கனகராஜ்

மிஸ்டர் ஆர்.என். ரவி அவர்களே, குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாண வர்களிடம், உங்களது மூளைக்குள் குவிந்திருக்கும் ஆதாரமற்ற குப்பைகளை கொட்டி, கடை விரித்திருக்கிறீர்கள். முதலாவதாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அந்நிய பணம்  வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த அவ தூறு ஒன்றும் புதிதல்ல; உங்கள் தலைவர்  மோடி 2014 தேர்தலுக்குப் பிறகு தன்னைக்  கொல்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ‘சுப்பாரி’ (காண்ட்ராக்ட்) கொடுத்தாக பேசினார். ஆண்டுகள் பல ஓடிவிட்ட பிறகும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவ்வளவு நாணயம். அவ்வளவு உண்மை. தற்போது  சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பிம்ப த்தை உடைப்பதற்காக வெளிநாட்டினருக்கும், இந்தியாவில் சிலருக்கும் சிலர் ‘சுப்பாரி’ கொடுத்ததாக மோடி மீண்டும் பேசியிருக் கிறார். இது ஆர்எஸ்எஸ்ஸின் டிஎன்ஏ. உங்களுடைய பேச்சும் அதன் தொடர்ச்சியே.

1996 முதல்...

ஸ்டெர்லைட் நிறுவனம் பணிகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே எதிர்ப்புகளும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. 1996-இல் நேஷனல் டிரஸ்ட் ஃபார் கிரீன் என்வி ரான்மெண்ட் அமைப்பும், 1997-ல் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோவும் நீதிமன்றத்தை நாடினார்கள். 1997-இல் சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் க.கனகராஜூம், 1998-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜும் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கின் மீதான தீர்ப்பாக 2010-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் பால் வசந்தகுமார் அடங்கிய அமர்வு, ஆலையை மூடவேண்டுமென உத்தரவிட்டது. இடைப்பட்ட காலத்தில் நடந்த மீறல்கள், விபத்துக்கள், ஆடு, மாடுகள் கொல்லப்பட்டது ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்கள் இந்த உத்தரவை வழங்கினர். அப்போது இந்த அமைப்புகள் போராட்டம் நடத்திய போதும் பெருமளவிற்கு மக்கள் அதில் பங்கேற்கவில்லை என்பது உண்மை. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தின் அத்து மீறல்கள் உள்ளூர் மக்களை வெறுப்படையச் செய்திருந்தது. இந்தக் காரணங்களால்தான் ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு வந்த போது பலரும் அதை வரவேற்றார்கள். இடைப்பட்ட காலத்தில் ஆலையைச் சுற்றி மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நிபந்தனைகளைக் கூட அந்த நிறுவனம் அமல்படுத்த மறுத்துவிட்டது. இத்தனைக்கும் அப்போது அந்நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 1999 கோடி ரூபாய். அத்தனை அடாவடித்தனம். மேற்கண்ட மனுதாரர்களில் யார் பணம்  பெற்றார்கள்? நீதிபதிகள் பணம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கினார்களா? குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் இப்படிப் பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டாமா? 

ஸ்டெர்லைட் அடாவடிகள்

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடைபெற்ற பிறகு ஸ்டெர்லைட்டின் அத்து மீறல்களும் அடாவடித்தனமும் அதிகரித்தது. நிலம், நீர், காற்று மாசுபடுவதைப் பற்றி நிறு வனம் கவலை கொள்ளவில்லை. தன் நிறு வனத்தில் உருவான காப்பர் ஸ்லாக் என்கிற நச்சுக்கழிவை எவ்வித கருணையும் இல்லாமல் நீரோடைகள் அருகே கொட்டி வைத்தது. மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அதை பயன்படுத்தலாம் என்று யோசித்த போது கூட சில மீட்டர்களுக்கு அப்பால் போட சுற்றுப்புறச் சூழல் விதிகள் அனுமதிக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் உள்ளூர் ஆட்கள் பார்த்து வந்த ஒப்பந்தப் பணிகளையும், பணி யாளர்களையும் நிறுத்திவிட்டு, எல் அண்ட் டி நிறுவனத்திடம் அப்பணிகளை ஒப்படைத்தது. இதுவும் அம்மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.  இதற்கிடையில் உச்சநீதிமன்ற வழிகாட்டு தலின்படி நான்கு மனுதாரர்களுக்கு முன்பாக என்இஇஆர்ஐ (நீரி) நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டுமென்று (2011) சொல்லப்பட்டது.  நிலத்தடி நீர், குளத்தின் நீர் மாசுபட்டது. இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங் களில் தூங்குவோர் ஆலையிலிருந்து வெளி யிடப்பட்ட நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறி எழுவதும், குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் நடந்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப் படாமல் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனு மதியளித்தது. இதுதான் அந்தப் போராட்டம் அத்தனை வீரியத்தோடு எழுவதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. அதன் பிறகுதான் 100 நாள் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. இதில் எந்த அமைப்பாவது வெளிநாட்டிலிருந்து மோசமான நோக்கத்திற்காக பணம் பெற்றி ருந்தால் நிச்சயமாக அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

திசை திருப்பும் செயல்

ஆனால், 2018க்குப் பிறகு இந்த 5 ஆண்டு காலமும் ஒன்றிய அரசுப் பொறுப்பில் இருக்கும் பாஜக ஒரு துரும்பைக்கூட இந்தப் பிரச்சனை யில் எடுத்துப் போடவில்லை என்பதுதான் உண்மை. எனவே, ஆரம்பம் தொட்டு அடாவடி யாக நடந்து கொண்ட ஸ்டெர்லைட்டிற்கு எதி ராகத்தான் மக்கள் போராடினார்கள். இது அந்நி யச் சதியால்தான் நடந்தது என்று சொல்வது அறி யாமை, மக்களை திசை திருப்பும் செயல். ஆர்.என்.ரவி அவர்களே, கலால் வரி ரூபாய் 746 கோடி அளவிற்கு இந்திய அரசை  ஏமாற்றிய குற்றத்திற்காக 2010-ஆம் ஆண்டு வரதராஜன் என்கிற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார். பொதுவாக தங்கக் கடத்தலைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். தங்கம் என்று அறி விப்புச் செய்துவிட்டு அதைவிட விலை உயர்ந்த  பிளாட்டினம், பல்லாடியம் போன்ற உலோகங் களை ஸ்டெர்லைட் நிறுவனம் இந்திய அரசை யும் மக்களையும் ஏமாற்றி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. அந்தப் பணம் எங்கே  போனது? ஏன் அதைப் பற்றி நீங்களோ உங்கள் எஜமானர்களோ பேச மறுக்கிறீர்கள்? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  வரதராஜனுக்கு பிணை வழங்க 200 கோடி  ரூபாய்க்கு உத்தரவாதம் கேட்டதை உங்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு வாய்க்கு வந்தபடி பேசுவது ஆளுநர் பொறுப்பு க்கு மட்டுமல்ல; ஒரு சராசரி மனிதருக்கே அழகானதல்ல. உயர்நீதிமன்றம் 2010-ல் ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்டதும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2018-ல் அந்த ஆலை விதிகளை மீறி விட்டது என்று மூட உத்தரவிட்டதும், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மண்ணையும் காற்றை யும் மாசுபடுத்திவிட்டது என்று 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததும் வெளி நாட்டுப் பணத்தின் தாக்கமா மிஸ்டர் ரவி? இந்தியாவின் தேவையில் 40% தாமி ரத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி  செய்தது நின்றுவிட்டது என்று கண்ணீர்விட்டி ருக்கிறீர்கள். அப்போதும் கூட ஸ்டெர்லைட் உற்பத்தி செய்த தாமிரத்தின் கணிசமான அளவு  வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்ததை நீங்கள் அறிவீர்களா?

ரவி பேசுவது தேச நலனா?

மிஸ்டர் ரவி, ஏதோ இதை தேசத்தின்  நலனிலிருந்து பேசுவதுபோல் பம்மாத்து செய்திருக்கிறீர்கள். காட்டன் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசின் நிறு வனம் குறித்து உங்களுக்கு தெரியாமல் இருந் திருக்க வாய்ப்பில்லை. பருத்தி விளையும் போது விவசாயிகளிடம் நியாயமான விலையில் கொள்முதல் செய்வதும், தொழிலுக்கு தேவைப்படும் போது நியாயமான விலையில் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதும் அதன் பணியாக இருந்தது. மோடி பிரதமரான பிறகு  எல்லா நிறுவனங்களைப் போலவே அதையும் சீரழித்துவிட்டார். அந்த நிறுவனமே கூட லாப நோக்கத்திற்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டது. அதன் காரணமாக கோவை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளி லுள்ள கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஜவுளி தொழில்கள் கடும் நெருக்கடிக் குள் சிக்கியுள்ளதை அறிவீர்களா? இந்த தொழில்களில் மட்டும் தமிழ்நாட்டிலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் 5 லட்சம்  பேர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளதையும், இதன் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங் களில் உள்ள வியாபாரம் மற்றும் இதர தொழில் கள் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகியிருப்ப தையும் தாங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு அந்நிய நாட்டுப் பணம் என்கிற பூச்சாண்டி வழக்கமாக தன் பக்க நியாயங்களைச் சொல்ல முடியாதபோது சங்பரிவாரங்களால் முன்வைக்கப்படும் ஏமாற்றுதான். இதேபோன்று இலவசங்கள் தேசத்தைக் கெடுத்துவிட்டதாகவும் உங்கள் தலைவர் மோடி வந்துதான் அனைத்தையும் தலைகீழாகப்  புரட்டிவிட்டதாகவும் ஒரு புரட்டை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மற்றம் இமாச்சலப் பிரதேச தேர்தலில் கல்லூரி செல்லும் மாணவியருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக தருகிறோம்; இரண்டு சமையல் எரிவாயு உருளை இலவசமாகத் தருகிறோம்; 150 யூனிட் மின்சாரம் இலவசமாக தருகிறோம் என்றும் இன்னுமாகவும் மோடி வகையறா அள்ளி வீசியதை நாடறியும். யாரையோ அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு மோடி வகையறா மீதுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்.

வேலையை ஒழுங்காகச் செய்யுங்கள்

அடுத்ததாக, தமிழ்நாட்டிலுள்ள சாதாரண மக்களிடம் பெற்ற வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற தாங்கள்  ஆளுநருக்குரிய வேலையை உருப்படி யாகச் செய்யாமல் அதற்கு சாக்குப்போக்கு சொல்வதையே வழக்கமாக வைத்திருக் கிறீர்கள். நீங்கள் கையெழுத்துப் போட வில்லை என்றால் அதை நிராகரித்ததாககொள்ள வேண்டுமென்றும் அது நாகரீகமாகச் சொல்வ தென்றும் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் நாகரீக வாதியா, அநாகரீகவாதியா என்பதெல் லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு கவலையில்லை. உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்யுங்கள். ஒன்று தெரியுமா மிஸ்டர் ரவி, 2011-ம் ஆண்டு அப்போது மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அந்த ஆண்டு ஜூன் 3, 4 தேதி களில் லக்னோவில் பாஜகவின் தேசிய செயற்குழு நடைபெற்றது. அதில் கூட்டாட்சி தொடர்பாக ஒரு உபதேசத்தை அவர் முன்மொழிந்திருப்பார். அதில் முக்கியமான உபதேசம், குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றிய 7 மசோதாக்கள் கையெழுத்திடாமல் இருப்பது  குறித்து கவலை தெரிவித்திருப்பார். மோடியால் நியமிக்கப்பட்ட உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

2 மாதம் ஆனதற்கே அதைப்  பெரிய பூதாகரமாக்கி பாஜகவின் அகில இந்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறார்கள். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா க்களின் மீது வருடக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது அப்பட்ட மான ஆணவம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்நிலைக்காக உருவாக்கப்படுகிற திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு அதன்மீது உட்கார்ந்து கொண்டிருப்பது மக்கள் விரோதச் செயல். தமிழ்நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் இதை ஏற்கப் போவதில்லை. உங்கள் அடா வடி தொடரும்பட்சத்தில் உங்களை மதிக்கப் போவதும் இல்லை. வேண்டுமானால் பாஜகவை ஒன்றிய ஆட்சிக்கு இந்திய மக்கள் தேர்ந்தெடுத்த குற்றத்திற்காக நீங்கள் தண்டச் சோறு சாப்பிட்டுவிட்டு தாராளமாய் இப்படி நாகரீகம் என்கிற பெயரில் அராஜகங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கலாம். வர லாறு உங்களையும் உங்களை நியமித்தவர் களையும் உங்களுக்கு ஆதரவாக பேசுபவர் களையும் கருணையின்றி தண்டிக்கும்.