states

img

பீகாரைப் போல உ.பி.யிலும் கூட்டணிகள் மாறும்: அகிலேஷ்

லக்னோ, ஆக.19- பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தி லும் பாஜக கூட்டணியை விட்டு கட்சிகள் வெளியேறும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகி லேஷ் கூறியுள்ளார். பீகாரில் பாஜக கூட்டணி யிலிருந்து வெளியேறிய ஐக் கிய ஜனதா தளம் தலை வர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கை கோர்த்து ‘மகா கூட்டணி’ அரசை ஏற்படுத்தியுள்ளார். நிதீஷின் இந்த முடிவு, எதிர்க் கட்சிகளின் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில், லக்னோ வில் உள்ள சமாஜ்வாதி தலைமையகத்தில் பிடிஐ  செய்தியாளருக்கு அகி லேஷ் பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

‘பீகாரில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தேசிய அரசியலுக்கான நேர் மறையான  அறிகுறியாகும். பாஜகவின் அரசியல் கூட்டாளிகள் மகிழ்ச்சியாக இல்லை. உத்தரப்பிரதேசத் தில் அவர்கள் (பாஜக கூட்டணி கட்சிகள்) என்ன பெறுகிறார்கள் என்பதை பாருங்கள். ஒரு நாள் அவர் களும், பாஜக-வை விட்டு ஓடிவிடுவார்கள். 2024 மக்களவைத் தேர்த லில் பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று சக்தி உரு வாகும். அதனை மக்கள் ஆத ரிப்பார்கள். ‘இது தொடர் பான பணிகளில், தெலுங் கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, எங்களது கட்சியை அமைப்பு ரீதியில் வலுப்படுத்தவும் மறுசீர மைக்கவும் தற்போது கவ னம் செலுத்தி வருகிறேன். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2 மக்கள வைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணை யம் நிறைய நேர்மையற்ற செயல்களை செய்தது. அது எதிர்ப்பு குரல்களை கேட்க வில்லை. வாக்காளர் பட்டிய லில் இருந்து ஏராளமான வாக்குகள் நீக்கப்பட்டன. ராம்பூரில் சமாஜ்வாதிகள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை, ஆசம்கரில் சமாஜ்வாதி கட்சியினருக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. எங்கள் புகார்களு க்கு அது செவிசாய்க்க வில்லை. ஒன்றிய அரசின் அழுத்தமே இதற்கு காரணம். இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.

;